முத்திரை மற்றும் பதிவு கட்டணம் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டியவை

தமிழ்நாட்டில்  ஒரு சொத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய, அந்த சொத்தை வாங்குபவர் சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை முத்திரைக் கட்டணமாக (Stamp duty) செலுத்த வேண்டும். முத்திரை மற்றும் பதிவு கட்டணம் ஆனது சமீபத்திய கட்டணங்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் ஆனது சொத்து விற்பனை அல்லது வாங்குதலுக்கான ஆதாரமாகச் செயல்படுவதால் இந்தக் கட்டணங்களைச் செலுத்துவது கட்டாயமாகும்.  ஒருவர் சொத்து உரிமை கோர முத்திரை தீர்வு கட்டணம் செலுத்துதல் அவசியம். முத்திரையிடப்பட்டவுடன் ஆவணம் ஆனது சட்டபூர்வமாக செல்லுபடியானதாக மாறும்.

சொத்து உரிமைக்கான சட்டபூர்வமான ஆவணமாக இந்த ஆவணம் செயல்படுவதால்,   சட்ட பிரச்சைனைகளுக்கு நீதிமன்றத்தில் இது ஒரு செல்லத்தக்க ஆவணமாக கருதப்படுகிறது. முத்திரை மற்றும் பதிவு கட்டணம் எப்போதும் சதவீத அடிப்படையில்தான் காட்டப்படும். முத்திரைத் தீர்வைத் தொகை ஆனது சொத்து பரிவர்த்தனை மதிப்பின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆகும்.

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் தாக்கம் தரக்கூடிய காரணிகள்

நிலத்தின் விலை மதிப்பு கணக்கீடு ஆனது பல்வேறு காரணிகளின் அடிப்படையில்  அந்தந்த  மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சொத்து வாங்கும்போது, எந்த வகையான சொத்துகளை வாங்குகிறோம் என்ற அடிப்படையிலான பல்வேறு காரணிகளை பொறுத்து, பதிவுக் கட்டணங்களை செலுத்த வேண்டிவரும். பொதுவாக முத்திரை வரியின் செலவு ஆனது மொத்த சொத்தின் சந்தை மதிப்பில் 5 முதல் 7%  வரை ஆகும்  மற்றும் பதிவு கட்டணங்கள் சொத்தின் சந்தை மதிப்பில் 1% ஆகும்.

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் செலுத்துதல்  ஆனது சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான சொத்து விற்பனை, குத்தகை, பகிர்வு மற்றும் மறுவிற்பனை ஆகிய நடைமுறைகளுக்கு பொருந்தும். தமிழ்நாட்டில் முத்திரை மற்றும் பதிவு கட்டணம் ஆனது  நகர்ப்புறங்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களுக்கும் ஒரே மாதிரியானவை ஆகும்.

தமிழ்நாட்டில் முத்திரை மற்றும் பதிவு கட்டணம் ஆனது நகரின் நகராட்சியின்  எல்லைக்கு உட்பட்டும், நகராட்சியின்  எல்லைக்கு வெளியேவும் உள்ள சொத்துகளின் அடிப்படையில் வேறுபடும். நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சொத்து ஆனது அமைந்து இருந்தால், கூடுதல் தொகையானது அதற்கு வசூலிக்கப்படும்.

சொத்து அமைந்துள்ள இடத்தின் வசதிகளும் கூட முத்திரை  மற்றும் பதிவு கட்டணத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சம் ஆகும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கம்யூனிட்டி ஹால், நீச்சல் குளம், ஜிம், க்ளப் ஹவுஸ் முதலான வசதிகளுடன் கூடிய ஹவுசிங் ப்ராஜக்ட் கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு அதிகமான தொகையில் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டிவரும்.

வீடு சொத்துகளுக்கு செலுத்த வேண்டிய முத்திரை  தீர்வை கட்டணத்தை விட  வணிக சொத்துகள் மீது முதலீடு செய்தால், அதற்கான முத்திரைத் தீர்வை கட்டணம் அதிகமாக வரும். சூப்பர் பில்டப் ஏரியாவின் அடிப்படையில் பல மாடிகளைக் கொண்ட அலுவலகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கணக்கிடப்படும்.

மனைகள் மற்றும் நிலங்களாக இருந்தால், நிலத்தின் மொத்த சதுர அடிகளின் மடங்குகளின் அடிப்படையில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு ஆனது இருக்கும். சொத்து என்பது ஒரு Indipendent House-கவோ அல்லது ஒரு Villa-வாகவோ இருந்தால், மொத்த கட்டுமானப் பகுதியின் அடிப்படையில் பதிவுக் கட்டணத் தொகை ஆனது கணக்கிடப்படும்.

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது

  • சொத்தின் சந்தை மதிப்பு
  • சொத்து வகை மற்றும் தளங்களின் எண்ணிக்கை
  • சொத்து அமைந்துள்ள இடம்
  • பயன்படுத்தப்படும் நோக்கம் (குடியிருப்பு அல்லது வணிகமாக இருந்தாலும்)
  • சொத்தின் வயது

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்

  • PAN Cord
  • சொத்து உரிமையாளர் மற்றும் சாட்சிகளின் அடையாளச் சான்றுகள்
  • 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
  • முத்திரைத் தீர்வை கட்டண ரசீது
  • விற்பனைப் பத்திரம்
  • நகராட்சி வரி செலுத்திய ரசீது
  • அதிகாரம் பெற்ற நபர் (Power of Attorney)
  • நோ அப்ஜெக்‌ஷ்ன் சான்றிதழ் (NOC)

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் நேரடியாக (ஆஃப்லைன் மூலம்) செலுத்துவது

இயற்பியல் முத்திரைத் தாள் வழியாக தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதற்கு துணைப் பதிவாளர் அலுவலகத்தை  நாட வேண்டும். தமிழ்நாட்டில் முத்திரை கட்டணங்களை செலுத்தும் முன் ஒருவர் மாநில வரிவிதிப்பு அதிகாரிகளை அணுகி சரிபார்க்க வேண்டும்.

சொத்து வாங்குபவர்கள் முத்திரைத் தீர்வைக் கட்டணங்களை தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று செலுத்தலாம். NEFT, RTGS, பணம், காசோலை, டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் முத்திரைத் தீர்வை கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பதாரர்கள் கட்டண சான்றிதழை பெறலாம்.

முத்திரை மற்றும் பதிவு கட்டணம் ஆன்லைனில் செலுத்துவது

முத்திரைத் தீர்வை தமிழ்நாட்டில் இ-ஸ்டாம்பிங் வசதி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். Stock Holding Corporation Of India Ltd., (SHCIL) என்பது நாட்டில் இ-ஸ்டாம்ப் சான்றிதழ்களை வழங்குவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய பதிவுக் காப்பீட்டு நிறுவனம் (CRA – Central Record-Keeping Agency) ஆகும்.

SHCIL (Stock Holding Corporation of India Limited) இ-வசதிக்காக, விஷயங்களை எளிதாக்க  CRA (Central Record-Keeping Agency) எளிதாக்குகிறது.

அதை எவ்வாறு பயன்படுத்தலாம்

  1. அதிகாரப்பூர்வ SHICL இணையதளத்திற்குச் செல்லவும் . www.stockholding.com.

  2. SHICL – ன் முகப்புப் பக்கத்தில் உள்ள E-Stamp Services பிரிவில் கிளிக் செய்யவும்.

  3. Scroll செய்து இ-ஸ்டாம்பிங்கை தேர்ந்தெடுக்கவும்.

  4. இ-ஸ்டாம்பிங் இணையதளத்தினுடைய புதிய பக்கத்தை திறக்கும் போது, வலது புறத்தில் உள்ள online payment  விருப்பத்தை கிளிக் செய்யவும்.

  5. online கட்டண வசதியின் இருப்பை விவரிக்கும் popup திறக்கும். அதை மூட சரி என்பதை கிளிக் செய்யவும்.

  6. இப்போது, இ-ஸ்டாம்பிங் கட்டண முறைக்கு பதிவு செய்யவும். நீங்கள் ஏற்கனவே உறுப்பினராக இருந்தால், பயனர் ID (பயனர்பெயர்), கடவுச்சொல் மற்றும் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.

  7. பதிவுசெய்து தமிழ்நாடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. படிவத்தில் உள்ள அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்து பதிவிறக்கவும்.

  9. பதிவிறக்கம் செய்தபின், படிவத்தின் பிரிண்ட் அவுட்டை எடுத்து அருகில் உள்ள SCHIL கிளையில் சமர்ப்பிக்கவும்.

ஒருவர் ACC (அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையம்)-க்கு சென்று, முத்திரைச் சான்றிதழுக்கான கட்டணத்துடன்  பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இ-ஸ்டாம்பிங் முறையில் முத்திரைத் தீர்வை கட்டணத்தை, டிமாண்ட் டிராஃப்ட், NEFT, RTGS, பே ஆர்டர், ரொக்கம், காசோலை மற்றும் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பரிமாற்றம் போன்ற பல்வேறு முறைகளில் செலுத்தலாம். மேலும், மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் கட்டணத்தை செலுத்த ஒருவர் விரும்பினால், முதலில் அவர் அருகில் உள்ள இ-ஸ்டாம்பிங் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

முத்திரைத் தீர்வை (Stamp duty) எப்போதும் சதவீத அடிப்படையில்தான் காட்டப்படும். முத்திரைத் தீர்வைத் தொகை ஆனது சொத்து பரிவர்த்தனை மதிப்பின் குறிப்பிட்ட சதவீதம் ஆகும். தமிழ்நாடு ஆனது இந்தியாவிலேயே அதிக முத்திரை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கும் மாநிலங்களில் ஒன்றாகும்.

சொத்துப் பதிவுகள் மூலம் கடந்த 2022 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.13,914 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய் ஆனது 2021 ஆம் ஆண்டு வருவாய் ரூ.10,643.08 கோடியை விட 31% அதிகம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வருவாயை  தமிழ்நாடு அரசு சொத்துப் பதிவுகள் மூலம் ஈட்டியுள்ளது. நிலப் பதிவுக் கட்டணம் என்பது சொத்து வாங்குவதற்கான ஒட்டுமொத்த செலவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் சொத்து வாங்குபவர்கள் நிலப் பதிவுக் கட்டணம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply