20 Years Of Sunami 2004 : 2004 கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை துயரத்தில் வாழும் குமரி மக்கள்

மக்களின் உயிர்களை பறித்து உடலை மட்டும் கரை சேர்த்த 2004 சுனாமி பேரலை துயரச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பலியானவர்களின் (20 Years Of Sunami 2004) நினைவுகளோடு வாழ்ந்து வரும் குமரி மக்கள்.

கன்னியாகுமரி

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது. மக்கள் இன்னும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தான் உள்ளனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் ஏற்பட்ட பேரழிவு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், சுனாமியில் தமது உறவினர்களை இழந்தவர்கள் (20 Years Of Sunami 2004) மறக்க முடியாத நினைவுகளோடும் அவர்களின் புகைப்படங்களைப் பார்த்தும் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றைய தினம் ஏற்பட்ட அழிவுகள் இன்னமும் தங்களின் கண்களில் நிழலாடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் தொலைதூரப் பகுதியான  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி போன்ற மீனவ கிராமங்களை சுனாமி தாக்கியது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள் . இதேபோல் 2004 டிசம்பர் 25-ம் தேதி கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கடலுக்கு செல்லவில்லை.

சுனாமி (20 Years Of Sunami 2004)

பகல் முழுவதும் வழிபாடுகளிலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்ட மீனவர்கள், இரவில் நிம்மதியாக உறங்கி, டிசம்பர் 26-ம் தேதி காலை வழக்கம் போல் கண்விழித்து தங்கள் பணிக்கு சென்றனர். இதற்கிடையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் காலை 8 மணியளவில் திடீரென ஒட்டுமொத்த கடலும் பொங்கி எழுந்து (20 Years Of Sunami 2004) கரையை நோக்கி வந்தது. ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்து வருவதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கத்தை விட பல அடி உயரத்தில் எழுந்த சுனாமியால் கடற்கரைக்கு அருகில் இருந்த மக்களையும் அவர்களது உடைமைகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்துச் சென்றது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடலின் ஆக்கிரமிப்புக்கான அறிவியல் காரணங்களை விளக்கிய பிறகுதான் உலகில் சுனாமி ஏற்பட்டதை அனைவரும் உணர்ந்தனர்.

7 ஆயிரம் பேர் உயிரிழப்பு

2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் மியான்மர் உட்பட 14 நாடுகளில் சுமார் 100 அடி அளவுக்கு ஆழிப்பேரலை ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி (20 Years Of Sunami 2004) பேரழிவை ஏற்படுத்தியது. இந்தப் பேரிடரில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7000 பேர் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடற்கரை முழுவதும் சுடுகாடாக மாறியது. எங்கும் வேதனையின் அழுகை ஒலித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் குழந்தைகளை இழந்து வருந்தினர். கரை ஒதுங்கிய உடல்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் எடுக்கப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டன. இந்த காட்சிகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

20 ஆண்டுகளை கடந்த சுனாமி

முந்தைய நாள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மக்கள், மறுநாள் சுனாமியால் கடற்கரையில் தவித்தனர். கிறிஸ்மஸ் தினத்தன்று மகிழ்ச்சியாக ஓய்வெடுத்து உறங்கிய மக்கள், மறுநாள் குடும்பமும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் தனிமையில் நின்றனர். சுனாமி ஏற்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் (20 Years Of Sunami 2004) கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. 20 வருடங்கள் கடந்தாலும், அவர்களின் மனதில் உறவுகளை நினைத்து வருந்துகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply