
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
சில அரசு ஊழியர்கள், பணி சார்ந்தும், பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற பிறகும் தன்னால் இயன்ற அளவுக்கு மக்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை தங்கள் கடமையாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தாங்கள் வகிக்கும் பதவியைப் பற்றி பெருமைப்பட்டு, முன்னுதாரணமாக, மக்கள் மனதில் உண்மையான ஹீரோக்களாக மாறுகிறார்கள். இறை (தெய்வம்/அரசன்) அன்பை தன் பெயரிலேயே வைத்திருக்கும் ஒருவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்!
A Journey Of Ten Thousand Miles புத்தகம் பற்றி கருத்து


வழக்கமான கட்டுரைகள் எனில் சென்று வந்த நாடுகள், அங்குள்ள சிறப்பு வாய்ந்த வரலாற்றுத் தலங்கள், புகழ்பெற்ற கோயில்கள், இயற்கைக் காட்சிகள், மக்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உணவு என அவர் அனுபவித்த சுவையான, இனிமையான, விரும்பத்தகாத அனுபவங்களைச் சொன்னால் அது எழுதப்படாத இலக்கணம். இறையன்புவின் பயணக்கட்டுரையில் உணவுப்பொருட்கள், மருந்துகள், சிகிச்சை முறைகள், பானங்கள், உடைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன. அவை எவ்வாறு பயணம் செய்து ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வந்தன என்பதை ஆய்வு செய்துள்ளார். இது தவிர, நாற்பத்தைந்து கட்டுரைகளில் மனிதர்களின் ஆபத்தான, பேரழிவு மற்றும் நாட்டைக் கண்டறியும் பயணங்களையும் விவரித்துள்ளார்.
உதாரணத்திற்கு
குதிரைகளுடன் தொடர்புடையது : பாபர் முதன்முதலில் காண்டாமிருகத்தைப் பார்த்தபோது, ’அது குதிரை போல் தெரிகிறது’ என்றார். (அது எப்படி நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது) உண்மையில் காண்டாமிருகம் குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நுட்பமான அறிவினால் தான் 14 வயதில் அரசரானார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாவீரன் அலெக்சாண்டர் வந்தார். சிறுவனாக இருந்தபோது, யூசபேலஸ் என்ற அடக்க இயலாத முரட்டுக் குதிரை தன் நிழலை பார்த்தே பயப்படும் அதன் பலவீனத்தை அறிந்து அதன் முகத்தைத் திருப்பி சவாரி செய்து வெற்றிக் கொண்டார். முப்பது வயது கொண்ட அந்த குதிரை இந்திய மன்னன் போரஸோடு போர் செய்யும்போது இறந்தது. அதனை ராணுவ மரியாதையுடன் அதை அடக்கம் செய்தார். நம் நாட்டு ராணா பிரதாப் சிங் அக்பருடன் போரிட்டபோது, குட்டி யானையின் கவசத்தை, தன் பிரியமான குதிரையான ‘சேத்தக்’ முகத்தில் போட்டு எதிரிகளை குழப்பினார். போரில் பலத்த காயம் அடைந்த அவரைக் காப்பாற்றி நீண்ட கால்வாயின் குறுக்கே அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தார். கடமையை நிறைவேற்றும் போதே உயிர் இழந்தார். இன்றும், அதன் கல்லறை ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ராஜஸ்மண்ட்’ என்ற இடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது வரலாறு தொடர்பானது. ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நாய் சைசில் பூமியில் திரிந்த விலங்குகளுக்கு முன்னங்காலில் நான்கு குளம்புகளையும், பின்னங்காளில் மூன்று குளம்புகளையும் கொண்டிருந்தன. பின்னர், அவை படிப்படியாக மாறி குதிரை வடிவம் பெற்றன. இது குதிரைகளைப் படிக்கும் அறிவியல் முறை. இன்னும் புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் குதிரைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தொகுத்து அளித்துள்ளார். ஆசிரியர் வெ.இறையன்பு எழுதிய இந்த பத்தாயிரம் மைல் பயணம் புத்தகத்தை (A Journey Of Ten Thousand Miles) படிக்க நீண்ட நாட்கள் ஆகலாம். பிராயணத்துடன் இந்த நூலை எடுத்துச்சென்றால் நிச்சயமாக அந்தந்த ஊரைப்பற்றிய மேலதிக தகவல்களுடன் பயணத்தை இனிமையாக்கும் என்பதில் ஐயமில்லை.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது