Aditya L1 Launch : சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Aditya L1 Launch - புதிய வரலாறு படைத்தது இந்தியா :

இந்தியாவின் முதல் சூரிய பயணமான ஆதித்யா எல்1 (BSLV) யில் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது என்று இஸ்ரோ தெரிவித்தது . இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா–எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் (Aditya L1 Launch) ஏவப்பட்டது.

பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், சூரியனை ஆராய்வதற்கும் ADITHIYA L 1 எனும் விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் இன்று வெற்றிகரமாக (Aditya L1 Launch) ஏவியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவின் தென் துரவப்பகுதியில் மெல்ல தரையிறங்கி புதிய வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி ஆய்வு துறையில் முன்னோடியான நாடான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள தற்போது முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியா மற்றொரு வரலாறு சாதனை படைக்க உள்ளது. ADITHIYA L 1 எனும் திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.

சூரியனை ஆய்வு செய்ய முக்கிய காரணம் :

சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் சூரியனிலிருந்து வெளிவரும் ‘காந்த புயல்தான்’. இந்த காந்த புயலானது பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய உலகில் நாம் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாப்பாக வைக்க மின்னணு சாதனங்கள்தான் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் உலகத்தில் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த காந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்க முடியாது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனில் இருக்கும் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ADITHIYA L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட்டு இருக்கிறது. நம் இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் (Aditya L1 Launch) இதுவாகும்.

பெங்களூருவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள STSC -ஷார் விண்வெளி நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. அங்கு நடைபெற்ற அனைத்து விதமான சோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அதை ‘PSLV-C57’ ராக்கெட்டுடன் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் பொருத்தினார்கள். இதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை இதை விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 11.50 மணியளவில் இது வெற்றிகரமாக விண்ணில் (Aditya L1 Launch) ஏவப்பட்டது.

ADITHIYA L 1 முக்கிய பணி :

சூரியனின் மேற்பரப்பு வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் இருக்கும் துகள்கள் ஆகியவை குறித்து இந்த ADITHIYA L 1 விண்கலம் ஆய்வு செய்து நமக்கு தகவல்களை அனுப்பும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் “லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்” எனும் இடத்தில் இந்த விண்கலமானது நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் பல மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் முக்கிய பணி.

நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சுமார் 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. இதில் பூமியின் ஈர்ப்பு விசையானது சில லட்சம் கி.மீ வரைதான் இருக்கும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு விசையும் சில கோடி கி.மீ வரைதான் அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட்’ ஆகும். இப்படி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இதுவரை 5 புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 5 புள்ளியில் எந்த பொருளை கொண்டு சென்று நிறுத்தினாலும் அது ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எப்போது இலக்கை சென்றடையும் :

இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலமானது L1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply