Air Passenger Traffic : ஒரே நாளில் 1,06,827 பயணிகள் வெளிநாடுகளுக்கு பயணித்து புதிய சாதனை
Air Passenger Traffic - விமானப் பயணிகள் போக்குவரத்து ஆனது 24/11/2023 அன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது :
24/11/2023 ஒரே நாளில் 1,06,827 பயணிகள் வெளிநாடுகளுக்கு பயணித்து விமானப் பயணிகள் போக்குவரத்து ஆனது புதிய (Air Passenger Traffic) சாதனையை படைத்துள்ளது. இது “இந்திய வானில் இன்னொரு மைல்கல் ” என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் கொண்டார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆனது, “விமானப் பயணிகள் போக்குவரத்தின் அணுகுமுறை, முற்போக்கான கொள்கைகள் மற்றும் பயணிகளிடையே ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை ஒவ்வொரு விமானத்திலும், ஒவ்வொரு நாளும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சிறப்பு உரை :
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “அதிகாரப்பூர்வ தரவுகளின்படி 23/11/2023 அன்று உள்நாட்டுப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 4,63,417 ஆகவும் விமானப் பயணங்கள் 5,998 ஆகவும் இருந்தன. விமான நிறுவனங்கள் 4,63,417 பேரை ஏற்றிச் சென்றதால் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஒரு புதிய சாதனை (Air Passenger Traffic) படைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளில் 4.56 லட்சம் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை நாம் ஏற்கனவே கடந்துவிட்ட நிலையில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை பற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எடுத்துரைத்தார்.
20/11/2023 அன்று CAPA இந்தியாவின் விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2023 இல் உரையாற்றும் போது அவர், “வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 140 மில்லியனுக்கும் அதிகமான விமானப் பயணிகள் இருப்பார்கள்” என்று கூறினார். 2014 முதல் 2020 வரையிலான ஆறு ஆண்டுகளில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஆனது 120 மில்லியனிலிருந்து சுமார் 275 மில்லியனாக 14.5% CAGR என இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் மேலும் கோவிட் பரவாமல் இருந்திருந்தால் சுமார் 18% CAGR-முதல் 20% CAGR-ரை எட்டியிருப்போம் என்றார்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு சந்தையாக இருக்கை திறன் அடிப்படையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா சர்வதேச இருக்கை திறன் அடிப்படையில் இன்னும் 18 வது இடத்தில் உள்ளது என்றார். நீண்டகால நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் வலுவாகத் தெரிகிறது என்றார். இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 2030 நிதியாண்டில் சுமார் 252 டிரில்லியன் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2020ல் 34.9%-ருந்து 2030ல் 40%மாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஆதரிக்கக்கூடிய விமானப் போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆனது கவனம் செலுத்துகிறது என்றார்.
Latest Slideshows
-
Seraman Kadhali Book Review : சேரமான் காதலி புத்தக விமர்சனம்
-
IPL 18 Season Starts Today : ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது
-
TNSTC Notification 2025 : அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Veera Dheera Sooran Trailer : வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Coconut Benefits In Tamil : தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
-
Bcci Announces 58 Crore Prize : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிப்பு
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்