Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
நவீன இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நபரான டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி (Ambedkar Jayanti 2025) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் ஒரு சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இந்தியாவின் சாதி அமைப்பு மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார், குறிப்பாக தலித்துகளின் உரிமைகளுக்காக போராடினார். இந்த நாள் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையையும், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான அவரது போராட்டத்தை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அம்பேத்கர் ஜெயந்தி 2025 (Ambedkar Jayanti 2025)
ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள், சமூக அதிகாரமளித்தல் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக சக்திவாய்ந்த அடையாளமாக (Ambedkar Jayanti 2025) மாறியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும், அம்பேத்கர் தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடினார். மேலும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது வாதிட்டார்.
அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் அம்பேத்கர் ஜெயந்தி நீண்ட காலமாக பொது விடுமுறையாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசு அதை நாடு தழுவிய விடுமுறையாக (Ambedkar Jayanti 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இந்த நாளில் மூடப்படும்.
அம்பேதகர் ஜெயந்தி வரலாறு & முக்கியத்துவம்
பள்ளிப்படிப்பு
டாக்டர் அம்பேத்கர் ஏப்ரல் 14, 1891 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தார். ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொண்டார். இருப்பினும், அம்பேத்கர் சமூக பாகுபாட்டால் கவலைப்படவில்லை, அதை எதிர்த்துப் போராட கல்வியை தனது கருவியாகப் (Ambedkar Jayanti 2025) பயன்படுத்தினார். அவர் மகாராஷ்டிராவின் சதாராவில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் படிக்கும் போது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளியில் மற்ற மாணவர்களுடன் உட்காரவோ விளையாடவோ கூடாது. பொதுவான குடிநீர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்காமல் தனி மண் பானையில் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது போன்ற பல துன்பங்களைச் சந்தித்தார். பல துன்பங்களைச் சந்தித்து தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.
பட்டப்படிப்பு
1904-ம் ஆண்டு, அவரது தந்தையின் பணி காரணமாக, அவர்கள் மும்பைக்கு குடிப்பெயர்ந்தனர். அவர் மும்பையில் தனது இளங்கலைப் படிப்பை முடித்தார். பின்னர் பரோடா மன்னரின் உதவியுடன் 1912 ஆம் ஆண்டு அறிவியல், பொருளாதாரம் மற்றும் அரசியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, பரோடா மன்னரின் அவையில் சிறிது காலம் படைத்தலைவராக பணியாற்றினார்.
அந்த அவையிலும் அவர் பல இன்னல்களைச் சந்தித்தார். எனவே அம்பேத்கர் தனது படைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பைக்குத் திரும்பினார். பின்னர், பரோடா மன்னர் அம்பேத்கரைச் சந்தித்து, அவரது கஷ்டங்களைப் பற்றி அறிந்துகொண்டு (Ambedkar Jayanti 2025) வெளிநாட்டில் கல்வி கற்க உதவினார். பின்னர் முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றைப் பயின்றார்.

சமூகப்பணி
முதுகலைப் படிப்பை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் மாற்றத்திற்காகப் போராடத் தொடங்கினார். தனது உரைகள் மூலம், தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை (Ambedkar Jayanti 2025) ஏற்படுத்தினார். இரட்டை வாக்குரிமை சட்டத்தைப் பெறுவதற்காக அவர் லண்டன் சென்று இரண்டாம் உலக வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு அந்தச் சட்டத்தைப் பெற்றார். ஆனால் காந்திஜி இந்த இரட்டை வாக்குரிமைச் சட்டத்தை ஏற்கவில்லை. எனவே, இரட்டை வாக்குரிமைச் சட்டம் கைவிடப்பட்டு, தாழ்த்தபட்ட சாதியினருக்கு தனித் தொகுதிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
முதல் சட்ட அமைச்சர்
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அவர் முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியின் மூலம், குடிமக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக அரசியலில் பல சட்ட விதிகளைத் தொகுத்தார். இது ஒரு சிறந்த சமூக ஆவணமாகக் கருதப்படுகிறது.
இறப்பு
1955-ம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். நோய் கடுமையாகி, பார்வையை இழந்து, படுக்கையில் இருந்தார். டிசம்பர் 6, 1956 அன்று டெல்லியில் தூக்கத்திலேயே இறந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிய ஒரு சிறந்த மனிதர் (Ambedkar Jayanti 2025) ஆவார். அம்பேத்கருக்கு 1990-ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதானா ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 1991-ம் ஆண்டு சமூக நீதி ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, அம்பேத்கர் ஜெயந்தி அதிக அங்கீகாரத்தைப் பெற்றது மற்றும் பல மாநிலங்களில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்