
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
APPA App Launches : அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு APPA என்ற புதிய செயலி அறிமுகம்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில், அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு ‘அப்பா’ (APPA) என்ற புதிய செயலியை (APPA App Launches) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.
கடலூர் சுற்றுப்பயணம்
பல்வேறு ஆய்வுக்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் நேற்று கடலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் (APPA App Launches) முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அப்பா என்ற செயலியையும், புத்தகத்தையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு மாநில பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7-வது மண்டல மாநாடாக இந்த ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழா’ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று (APPA App Launches) தாமதமாக வருகை தந்தார். வந்ததும் பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கினார். தான் தாமதமாக வந்ததற்கு காரணம் வரும் வழிகளில் மக்களை சந்தித்தேன். அதனால்தான் தாமதமாகிவிட்டது என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
அப்பா செயலி அறிமுகம் (APPA App Launches)


மேலும் அவர் பேசுகையில் அம்மா, அப்பா மற்றும் ஆசிரியரை தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். சமீபகாலமாக கல்வித் துறையில் உலகத் தர சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்க்கிறோம் என்று கூறினார். மேலும் அவர் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை (APPA App Launches) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பேசிய அவர் கட்சிக்காரர்கள் திராவிட முன்னேற்ற இயக்கத்துக்கு தலைவர் என்பதால் என்னை தலைவர் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர் என்னை அன்புடன் அப்பா என்று அழைக்கும் போது ஆனந்தமாக இருக்கிறது. அப்பா என்ற உறவு எப்போதும் மாறாது. இந்த உறவு எனக்கு கூடுதல் பொறுப்புகளை கூட்டியிருக்கிறது என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நான் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது எனவும் தெரிவித்தார்.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது