Ashwin Talks About Pakistan : இந்திய ஆடுகளங்களைப் பற்றி சரியான புரிதல் இல்லை...
மும்பை :
Ashwin Talks About Pakistan : உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்வியடைந்ததற்கு, இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாததே முக்கிய காரணம் என Ravichandran Ashwin (Ashwin Talks About Pakistan) கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் சிலர் கணித்துள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்று பார்க்கப்படுகிறது.
இதுவரை பாகிஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அரையிறுதி சுற்றுக்கு வாய்ப்புள்ளது. ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு கடும் சவால் கொடுத்த பாகிஸ்தான் அணி, இந்தியாவில் தோல்வியை தழுவுகிறது.
Ashwin Talks About Pakistan :
Ashwin Talks About Pakistan : சுழற்பந்து வீச்சுக்கு உகந்த சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் Ravichandran Ashwin பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணியில் 2 வீரர்களை தவிர மற்ற எந்த வீரர்களுக்கும் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லை. ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் போன்ற வீரர்கள் காணாமல் போனதற்கும் அதுவே காரணம். பாகிஸ்தான் வீரர்கள் எந்த லைன் மற்றும் லெந்த் பந்துவீசுவது சரியானது என்று தெரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. ஒரு வீரர் உடனடியாக ஆடுகளங்களுக்கு ஏற்ப மாறுவது கடினம். பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் கூட இல்லை.
ஆனால் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் ஹைதராபாத் மைதானத்தில் பரிச்சயமானவர்கள். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், ஐதராபாத் மைதானத்தில் நான் கூட 5 முதல் 6 போட்டிகள் மட்டுமே விளையாடியிருப்பேன். ஆனால், டேவிட் வார்னரின் சொந்த மைதானத்தைப் போலவே ஹைதராபாத் மைதானமும் பரிச்சயமானது. புதிய சூழலால் பாகிஸ்தான் அணி திணறுகிறது என நினைக்கிறேன். இந்திய ஆடுகளங்கள் அனைத்து இடங்களிலும் ஸ்பின் ஆகுவதில்லை. ஒரு சில இடத்தில் பந்து வீசினால் மட்டுமே ஸ்பின் ஆகும். இதனை முழுமையாக அறியாத பாகிஸ்தான் அணி திணறுவதில் (Ashwin Talks About Pakistan) ஆச்சரியமில்லை.
Latest Slideshows
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்
-
Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்