Ashwin Talks About Pakistan : இந்திய ஆடுகளங்களைப் பற்றி சரியான புரிதல் இல்லை...
மும்பை :
Ashwin Talks About Pakistan : உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்வியடைந்ததற்கு, இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாததே முக்கிய காரணம் என Ravichandran Ashwin (Ashwin Talks About Pakistan) கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் சிலர் கணித்துள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்று பார்க்கப்படுகிறது.
இதுவரை பாகிஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அரையிறுதி சுற்றுக்கு வாய்ப்புள்ளது. ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு கடும் சவால் கொடுத்த பாகிஸ்தான் அணி, இந்தியாவில் தோல்வியை தழுவுகிறது.
Ashwin Talks About Pakistan :
Ashwin Talks About Pakistan : சுழற்பந்து வீச்சுக்கு உகந்த சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் Ravichandran Ashwin பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணியில் 2 வீரர்களை தவிர மற்ற எந்த வீரர்களுக்கும் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லை. ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் போன்ற வீரர்கள் காணாமல் போனதற்கும் அதுவே காரணம். பாகிஸ்தான் வீரர்கள் எந்த லைன் மற்றும் லெந்த் பந்துவீசுவது சரியானது என்று தெரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. ஒரு வீரர் உடனடியாக ஆடுகளங்களுக்கு ஏற்ப மாறுவது கடினம். பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் கூட இல்லை.
ஆனால் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் ஹைதராபாத் மைதானத்தில் பரிச்சயமானவர்கள். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், ஐதராபாத் மைதானத்தில் நான் கூட 5 முதல் 6 போட்டிகள் மட்டுமே விளையாடியிருப்பேன். ஆனால், டேவிட் வார்னரின் சொந்த மைதானத்தைப் போலவே ஹைதராபாத் மைதானமும் பரிச்சயமானது. புதிய சூழலால் பாகிஸ்தான் அணி திணறுகிறது என நினைக்கிறேன். இந்திய ஆடுகளங்கள் அனைத்து இடங்களிலும் ஸ்பின் ஆகுவதில்லை. ஒரு சில இடத்தில் பந்து வீசினால் மட்டுமே ஸ்பின் ஆகும். இதனை முழுமையாக அறியாத பாகிஸ்தான் அணி திணறுவதில் (Ashwin Talks About Pakistan) ஆச்சரியமில்லை.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்