Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
நான்கு வயது குழந்தையான குமுதா வந்தாள், அப்போது வினிதா அவளைப் கட்டிபிடித்து தலையில் முத்தமிட்டாள். வினிதா குழந்தையின் எல்லா கேள்விகளுக்கும் (Aval Manam Book Review) சலிப்படையாமல் பதில் சொல்லுவாள்; ஒவ்வொரு பதிலிலும் ஒரு குறிப்பிட்ட அக்கரை இருக்கும். திடீரென்று, குமுதாவின் கேள்வி வினிதாவை சங்கடப்படுத்தியது வினிதா நிலை குலைந்தாள்; அவளுடைய கணவர் சசியும் அதிர்ச்சி அடைந்தார். அம்மா அப்பா இல்லாத என்னை பார்த்து ஒரு மாமி அனாதைன்னு திட்டினாங்க. அப்போ குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்லுறது. குழந்தை குமுதாவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது. அனாதை என்ற சொல் அந்த குழந்தையை எவ்வளவு பாதித்திருக்கிறது. வார்த்தையை தூக்கி எறிபவருக்கு குழந்தையின் இதயத்தில் ஏற்படும் வலி தெரியுமா? வினிதா புத்திசாலித்தனமாக உரையாடலை வேறு திசைக்கு மாற்றினார். அவரது கணவர் சசியும் அவர்களுடன் சேர்ந்ததால், விஷயத்தை மாற்றுவது எளிதாக இருந்தது.
சசி சிறிய வயதில் இருந்தே ஒரு காப்பகத்தில் வளர்ந்தவன். அவர் ஒரு நன்றாக படிக்கக்கூடிய மாணவர்; இப்போது அவர் ஒரு வங்கி அதிகாரி. கல்லூரியில் தொடங்கிய வினிதாவின் நட்பு, பின்னர் காதலாக மாறி தொடர்ந்தது. வினிதாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ள ஐந்து ஆண்டுகள் ஆனது. கொரோனா காரணமாக அரசு அனுமதித்த நபர்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. அனாதை என்று அழைக்கப்பட்டதால், அனாதை இல்லம், பள்ளி மற்றும் கல்லூரியில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து சசி அவ்வப்போது (Aval Manam Book Review) வினிதாவிடம் கூறி ஆறுதல் தேடிக் கொள்வான். வினிதாவின் ஆறுதல் மொழிதான் அவரது மன காயங்களை ஆற்றும் மருந்தாக இருந்தது. வினிதாவின் சொல் எதையும் அவர் ஒருபோதும் தட்டியதில்லை; தட்டும்படியான எதையும் அவள் பேசியதும் இல்லை. குமுதா விளையாடிவிட்டு வெளியேறியதும், வினிதா தனது கணவரிடம் பேச ஆரம்பித்தாள்.
அவள் மனம் (Aval Manam Book Review)

“எனக்கு ஒரு யோசனை சசி.”
“என்ன யோசனை, வினி?”
“குமுதாவை தத்தெடுக்கலாமா?”
சசி ஒரு கணம் அதிர்ச்சியடைந்து வினிதாவைப் பார்த்தான். நமக்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. என்ன அவசரம்? இனி குழந்தை பிறக்காதென முடிவு (Aval Manam Book Review) செய்துவிட்டாயா வினி என சசி கூற, அதற்கு வினி, அப்படி இல்லை; எப்போது வேண்டுமானாலும் பிறக்கட்டும் அவசரம் இல்லை. இப்போதைக்கு, நாம் குமுதாவை வளர்க்க வேண்டும் என கூறினால், அதற்கு அவர் கவனமாக யோசித்து முடிவு செய்வோம் என கூற, நான் கவனமாக யோசித்தேன்; நாம் இருவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். வினிதாவின் முடிவால் கட்டுப்பட்டுப் பழகிய அந்த மனிதன் மறுக்கவா போகிறான்.
குமுதாவின் பெற்றோர் மார்ச் 2020 இல் கோவிட்-19 நோயால் இறந்தனர். அப்போதிருந்து, அவளுடைய தாய்வழி பாட்டி அவளை வளர்த்து வருகிறார். தன் காலத்திற்குப் பிறகு தன் பேத்தியை யார் ஆதரிப்பார்கள் (Aval Manam Book Review) என்று பாட்டி கவலைப்பட்டார். இருவரும் பாட்டியைப் பார்த்து பேசினார்கள். அம்மா வினிதா, நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவளுடைய திருமணத்திற்கு அரசாங்கம் பணம் வழங்கும்; அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினர். அதற்கு பாட்டி அவள் வளர்ந்து திருமண வயதை அடையும் போது நான் அங்கே இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. உடலில் பல நோய்கள் இருக்குறது என்று பாட்டி கூற அதற்கு நீங்களும் எங்க கூடவே வந்து விடுங்கள்.
“நீங்களும் இங்கே வரலாம், தத்தெடுப்பதற்கான நடைமுறைகள் எல்லாம் நாங்கள் பூர்த்தி செய்து விடுகிறோம். அதற்கு பாட்டி நான் வேண்டாம், குமுதாவை கருணை இல்லம், காப்பகம் என்று விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை; எப்போதும் அவள் ஒரு அனாதை என்றும் யாரும் இல்லாதவள் என்றும் முத்திரை குத்தப்படுவாள் என்று நான் கவலைப்பட்டேன், அந்த அவமானத்தை நீங்கள் துடைத்துவிட்டீர்கள்” குமுதாவை தத்தெடுத்ததற்கான காரணத்தை வினிதா சசியிடம் கூட சொல்லவில்லை. ஒரு அனாதை என்பதால் அவள் கணவன் அனுபவித்த வலிதான் (Aval Manam Book Review) அவளை அப்படிச் செய்ய வைத்தது. குமுதா அவமானப்படக்கூடாது என்பதற்காக தன் கணவன் பட்ட அவமானத்தை துடைக்கவும் வினிதா நினைத்தாள். அவள் மனம் இப்போது தாய்மை நிலையை அடைந்ததால், அவள் கணவனை ஒரு குழந்தையைப் போல கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்