Balloon Modern Cinema Theatre - வியக்க வைக்கும் நவீன வடிவம்
தமிழ்நாட்டில் முதல்முறையாக, தருமபுரியில் வியக்க வைக்கும் நவீன வடிவமான Balloon Modern Cinema Theatre நிறுவப்பட்டுள்ளது. இந்த Balloon Modern Cinema Theatre ஆனது மிகப்பெரிய பலூனுக்கு உள்ளே இருந்து திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் செயல் வடிவம் ஆகும். உலக மக்களுக்கு பழங்காலம் முதல் இன்று வரை ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருப்பது சினிமா திரையரங்கம் ஆகும். உலகில் திரைப்பட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் திரையரங்குகளின் வடிவமும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது.
திரைப்படத் துறையைப் போலவே திரைப்படங்களை திரையிட்டு, ரசிகர்களை மகிழ்விக்கும் திரையரங்குகளின் வடிவமும், ஒவ்வொரு நாளும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஆரம்பக் காலத்தில் மணலைக் கூட்டி தரையில் அமர்ந்து சினிமா திரைப்படங்களை பார்த்து ரசித்த டூரிங் டாக்கீஸில் தொடங்கி இன்றைய மல்டிப்ளக்ஸ் வரையிலும், தொழில்நுட்பங்களில் DTS, 3D, I Max, Laser Dolby உள்பட மிகவும் அதிநவீனமாக உருவெடுத்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அக்குபஞ்சர் மருத்துவர் ரமேஷ் பொம்மிடி கிராமத்தில் Balloon Modern Cinema Theatre-ஐ நிறுவியுள்ளார் :
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர் ஆவார். இவர், தனது சொந்த ஊரில் Balloon Modern Cinema Theatre-ஐ நிறுவியுள்ளார். மருத்துவர் ரமேஷ் டெல்லியைச் சேர்ந்த Picture Time நிறுவனத்துடன் இணைந்து, 50 சென்ட் நிலத்தில் Balloon Modern Cinema Theatre-ஐ அமைத்துள்ளார். 20 ஆயிரம் சதுர அடியில் 140 இருக்கைகளைக் கொண்ட பலூன் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரையரங்கும் கட்டுமானம் இல்லாமல், ராட்சத பலூன் மற்றும் கன்டெய்னர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறை மீதான ஆர்வத்தில், நவீன வசதிகளுடன் புதுமையான திரையரங்குகளை உருவாக்கும் ஆசையில் பலூன் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பலூனுக்கு உள்ளே இருந்து திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தரும். இது ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை பரவசமாக்கும் முயற்சி ஆகும். கிராமப் புறத்தில் குறைந்த செலவில் மிகச்சிறந்த திரை அனுபவத்தைப் பெற கிராமப்புற திரையரங்குகளின் கட்டணமே நிர்ணயிக்கப்பட உள்ளது.
பலூன் திரையரங்க உரிமையாளர் அக்குபஞ்சர் மருத்துவர் ரமேஷ் உரை :
பலூன் திரையரங்க உரிமையாளர் ரமேஷ், “இந்த பலூனுக்கு உள்ளே திரையரங்கம் இருக்கும் முறை ஆனது ஜெர்மன் நாட்டின் திரையிடல் முறையாகும். மிகச்சிறந்த ஒலி அமைப்புடன் சினிமா பார்ப்பவர்கள் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் இருக்கும் சிறந்த திரையரங்குகளைப் போலவே வடிவமைத்துள்ள இந்த பலூன் திரையரங்கில் உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. திருமணம், பிறந்த நாள் விழாக்களை இந்த பலூன் திரையரங்கில் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். இந்த பலூன் திரையரங்க வளாகத்தில் கோழிக்கோட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட, பசுமை மாறாத செயற்கை புல்வெளியுடன் அழகிய பூங்கா (Balloon Modern Cinema Theatre) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திரையரங்கை வெறும் 3 மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றிடலாம் மட்டும் வேறு இடத்துக்கும் எடுத்துச் செல்லாம். இந்த பலூன் திரையரங்கில் தீ தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டு உள்ளது” என்கிறார்.
Latest Slideshows
-
Seraman Kadhali Book Review : சேரமான் காதலி புத்தக விமர்சனம்
-
IPL 18 Season Starts Today : ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது
-
TNSTC Notification 2025 : அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Veera Dheera Sooran Trailer : வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Coconut Benefits In Tamil : தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
-
Bcci Announces 58 Crore Prize : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிப்பு
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்