இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் Bilateral Investment Treaty-யில் கையெழுத்திட்டன
UAE இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும் (சுமார் 85 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகம் உள்ளது). இந்த நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடு ஆகும். இந்தியாவின் முதல் நான்கு முதலீட்டாளர்களில் UAEயும் உள்ளது (2022-23ல் அன்னிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில்). இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான அதிகாரப்பூர்வ இரண்டு நாள் (13/02/2024 & 14/02/2024) பயணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவருடன் ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில் மற்றும் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவர்கள் இருவரும் இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர். அவர்கள் இருவரும் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மையை பல்வேறு துறைகளில் ஆழமாக்குவது குறித்து விவாதித்தனர்.
பின்பு அவர்கள் இருவரும் எரிசக்தி, முதலீடுகள், உடனடி பணம் செலுத்தும் தளங்கள், உள்நாட்டு டெபிட்/கிரெடிட் கார்டுகளின் இணைப்பு, பொருளாதார தாழ்வாரம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்புக்கான எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு உடனடி பணம் செலுத்தும் தளங்களான UPI (இந்தியா) மற்றும் AANI (UAE) ஆகியவற்றை இணைக்கும் (Interlinking Of The Instant Payment Platforms) ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். தலைவர்கள் இருவரும் எரிசக்தி கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். கச்சா மற்றும் LPG-யின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஐக்கிய அரபு அமீரகம் இருப்பதைத் தவிர, இந்தியா இப்போது LNG-க்கான நீண்ட கால ஒப்பந்தங்களில் நுழைகிறது என்று பாராட்டினர்.
BIT - Bilateral Investment Treaty (இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்) :
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT – Bilateral Investment Treaty) என்பது ஒரு நாட்டு நிறுவனங்கள் மற்றொரு நாட்டு நிறுவனங்களில் தனியார் முதலீட்டிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவும் ஒப்பந்த நடவடிக்கை ஆகும்.(வர்த்தக ஒப்பந்தங்கள்) இந்த வகை முதலீடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI – Foreign Direct Investment) என்றும் அழைக்கப்படுகிறது. Bilateral Investment Treaty-முதலீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம் ஆனது வெளிநாட்டில் முதலீட்டைப் பாதுகாத்தல், தனியார் முதலீட்டை திறந்த, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடத்தும் சந்தை சார்ந்த உள்நாட்டுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் இந்த நோக்கங்களுடன் ஒத்துப்போகும் சர்வதேச சட்ட தரங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்தல் ஆகும். இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு நாடுகளிலும் இந்த ஒப்பந்தம் ஆனது முதலீடுகளை மேலும் மேம்படுத்துவதற்கு முக்கிய உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளது.
Latest Slideshows
-
Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது