
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Bill Gates Donation Percentage : பில் கேட்ஸ் 99 சதவீத சொத்தை மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது 162 பில்லியன் சொத்தில் 99 சதவீத சொத்தை தானமாக வழங்கப்போவதாக (Bill Gates Donation Percentage) அறிவித்து உள்ளார். மீதமுள்ள 1 சதவீத (1.62 பில்லியன்) மட்டுமே தனது குழந்தைகளுக்கு என ஒதுக்கி உள்ளதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார். உலக புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் பில் கேட்ஸ். அதன் மூலம் அவர் ஒரு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இவரது Windows OS நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் முறையே மாற்றி அமைத்தது. இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
இவர் 1994-ம் ஆண்டு மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் என்பவரை திருணம் செய்து கொண்டார். பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியரின் குழந்தைகள் மூவரின் பள்ளிப் படிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் விவாகரத்து பெறுவதாகச் சொல்லி உலகிற்கே ஷாக் கொடுத்தனர்.


மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill Gates Donation Percentage)
இவர் கம்ப்யூட்டர் துறையையும் தாண்டி தனது தொண்டு நிறுவனம் மூலம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். அவர் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.
ப்ளூம்பெர்க்கின் தற்போதைய மதிப்பீட்டின்படி பில் கேட்ஸ் சொத்தின் நிகர மதிப்பு 162 பில்லியனாக உள்ளது. அந்த 162 பில்லியன் சொத்தின் ஒரு சதவீதம் ஆனது 1.62 பில்லியன் ஆகும். இது இந்திய ரூபாயின் மதிப்பீட்டின்படி சுமார் ரூ.13,500 கோடியாகும். இந்த 1.62 பில்லியன் தொகை அவரது மூன்று குழந்தைகளுக்கு சமமாகப் பிரித்துத் தரப்படும். பில் கேட்ஸ் தனது செல்வத்தில் இந்த ஒரு சதவீதத்தை மட்டுமே தனது குழந்தைகளுக்கு ஒதுக்கி விட்டு 99 சதவீதத்தை தானமாக வழங்கப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் தனது குழந்தைகள் தன் மூலம் செல்வத்தைப் பெறுவதை விடச் சொந்தமாக வெற்றியை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டுத் தலைசிறந்த கல்வியையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் 69 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து யோசித்து முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகள் பெரிய செல்வத்தை அடைவதை விட தங்கள் சொந்தப் பாதைகளை உருவாக்கி தாங்களாக தங்களது வெற்றியை அடைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது