Caste Violence In Schools And Colleges : பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது - அரசு அதிரடி முடிவு
அரசு பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பெயர்களில் இருந்து சாதி அடிப்படையிலான பெயர்களை நீக்க வேண்டும் (Caste Violence In Schools And Colleges) என்று நீதிபதி சந்துரு ஆணையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சாதிய வன்முறையைத் தடுக்க நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
பள்ளிகளில் சாதிச் அடையாளங்களை காட்டுவதற்காக மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், காவி நிற கயிறுகளை அணிந்து செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி போன்ற தென் மாவட்டங்களில் இதுபோன்ற சாதி தகராறுகள் அதிகமாக நடப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து சாதி கயிறு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அதில், “பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் சாதியை குறிக்கும் வகையில், பல்வேறு வண்ணங்களில் கயிறுகளை கைகளில் அணிந்து செல்வது தெரியவந்துள்ளது. இதனால், மாணவர்கள் பல்வேறு ஜாதி குழுக்களாக பிரிந்து, மதிய உணவு இடைவேளை, விளையாட்டு நேரம், பள்ளி நேரம் என கலக்காமல் குழுக்களாக இயங்கி வருகின்றனர்”.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, இவ்விஷயத்தில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது இதுபோன்ற சாதி அடிப்படையிலான பிரிவினையின் தீய விளைவுகளை முன்னிலைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சாதி பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்கவும் (Caste Violence In Schools And Colleges) அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதியின் அடையாளமாக மாணவர்கள் வண்ணக் கயிறுகளை அணிவதைத் தடுக்குமாறு அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Caste Violence In Schools And Colleges - நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் :
இதை மேலும் பரிசீலித்த அரசு, சாதி பாகுபாட்டை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இதனிடையே இந்த ஆணையம் தனது அறிக்கையை செயல்தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. நீதிபதி சந்துரு அந்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் அறிவொளி மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். அப்போது, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் உடனிருந்தார். இந்த அறிக்கையில், சாதி வன்கொடுமைகளை ஒழிக்க உடனடி மற்றும் நீண்டகால செயல்திட்டங்கள் என இரண்டு வகையான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
- அரசு பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
- மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பெயரில் சாதி ரீதியான பெயர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.
- பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குபவரின் பெயரை சாதிப் பெயரோடு சேர்த்துப் பதிவு செய்யக் கூடாது.
- பள்ளியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரை கல்வி அதிகாரியாக நியமிக்கக் கூடாது. இவை உள்ளிட்ட பரிந்துரைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு