Chennai Corporation Notification 2025 : சென்னை மாநகராட்சியில் 345 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பெருநகர மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் நகர்புற சுகாதார நல மையங்களில் காலியாக உள்ள சுகாதாரத்துறை சார்ந்த பணியிடங்களை (Chennai Corporation Notification 2025) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி? வயது வரம்பு? சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Chennai Corporation Notification 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு 75 பணியிடங்களும், செவிலியர் பணியிடங்களுக்கு 70 பணியிடங்களும், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்கள்) பணியிடங்களுக்கு 80 காலிப்பணியிடங்களும், துணை செவிலியர் (Chennai Corporation Notification 2025) மற்றும் பேறுகாலப் பணியாளர் (பெண்) பணியிடங்களுக்கு 102 காலிப்பணியிடங்களும், எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு 12 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 345 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

சென்னை பெருநகர மாநகராட்சியில் இந்த மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்பிபிஎஸ் (MBBS) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், செவிலியர் பணியிடங்களுக்கு டிஜி.என்.எம் அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

சென்னை பெருநகர மாநகராட்சியில் இந்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், டெக்னிஷியன் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் (Chennai Corporation Notification 2025) விண்ணப்பிக்கலாம் எனவும், செவிலியர் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Corporation Notification 2025 - Platform Tamil

4.சம்பளம் (Salary)

சென்னை மாநகராட்சியில் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.60000/- சம்பளமும், செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.18000/- ஆயிரமும், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்கள்) பணியிடங்களுக்கு (Chennai Corporation Notification 2025) தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.14,000/- ஆயிரமும், துணை செவிலியர் மற்றும் பேறுகாலப் பணியாளர் (பெண்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.14000/- ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

சென்னை மாநகராட்சியில் இந்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)

சென்னை மாநகராட்சியில் இந்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு (Chennai Corporation Notification 2025) விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 ஆகவும், செவிலியர் பணியிடங்களுக்கு ரூ.500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

இந்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 5.04.2025 ஆகும். இதற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply