Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து

உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து (Easter Celebration) தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகை

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் (Easter Celebration) கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தேவாலயங்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு தயாராகி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு தேவாலயங்கள் தயாராகி வந்தன. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் தேவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் பிரார்த்தனை (Easter Celebration)

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இயேசு சிலுவையை கையில் ஏந்தி உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் வகையில் பாஸ்கா ஒளி (மெழுகுவர்த்தி) ஏற்றப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இயேசுவின் உயிர்த்தெழுதலைக் காண நேற்று மாலை முதல் வேளாங்கண்ணியில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பிரார்த்தனை வசதிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் (Easter Celebration) பங்கேற்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சாந்தோம் தேவாலயத்திலும் சிறப்பு நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. இது தவிர, நேற்று இரவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

Easter Celebration - Platform Tamil

தலைவர்கள் வாழ்த்து

செல்வப்பெருந்தகை: மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் கட்சி, கிறிஸ்தவ சமூகம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி வரும் காலங்களில் (Easter Celebration) கிறிஸ்தவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக தொடர்ந்து செயல்படும். அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

ராமதாஸ்: அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே கற்பித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த மூன்றாவது நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகின்றனர். அனைத்து கிறிஸ்தவ நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

அன்புமணி ராமதாஸ்: உலகின் இன்றையத் தேவை இரக்கம், சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவை அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் நாள் தான் ஈஸ்டர் திருநாள். தவறு செய்தவர்களை (Easter Celebration) மன்னிக்க வேண்டும். உலகம் ஒரே குடும்பமாக வாழ தேவையான அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் வளர்ச்சிக்கும், அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வளர்ச்சிக்கும் பாடுபட நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.

விஜய்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மனிதகுலத்திற்கு அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் தியாகத்தை போதித்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் (Easter Celebration) நாளாக ஈஸ்டர் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மேலும் பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பக்தர்கள் கூடும் தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply