Fees Fixed For Extending Construction Projects : கட்டுமான திட்டங்களுக்கான பதிவு காலம் நீட்டிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த கட்டுமான திட்டங்களுக்கான கால வரம்பை நீட்டிப்பதற்கு கட்டணம் (Fees Fixed For Extending Construction Projects) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அடுத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், புகார்களை விசாரிக்கவும், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம், மாநில ஆணையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் படி தமிழகத்தில் 5381 சதுர அடி அல்லது 8 வீட்டு மனைகள் இருந்தால் அந்த திட்டத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
கட்டணம் வசூலிக்கப்படும் விவரம்
தமிழகத்தில் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்ய 10.7 சதுர அடிக்கு 25 ரூபாயும், வணிக நிறுவன திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு 60 ரூபாய் என்ற விகிதத்தில் தற்போது வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் திட்டங்களுக்கான பதிவானது காலாவதியாகும் நாளி்லிருந்து 3 மாதத்திற்கு முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் கூடுதலாக 10% கட்டணம் வசூலிக்கப்படும் (Fees Fixed For Extending Construction Projects) என கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு ஒன்றை ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிட்டது.
இதன்படி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போதே விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அதற்கான கால வரம்பை தெரிவிக்க வேண்டும். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் கட்டுமானங்களை 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிப்பதாக தெரிவிக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாதபட்சத்தில் அதற்கு தேவையான ஆவண ஆதாரங்ககளை தெரிவித்து மேலும் 2 வருடங்கள் வரை அவகாசம் பெற்று கொள்ளலாம். இதுவரை இந்த காலவரம்பை புதுப்பிப்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் (Fees Fixed For Extending Construction Projects) இருந்தது. தற்போது இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கட்டணம் அறிவிப்பு (Fees Fixed For Extending Construction Projects)
இந்த அறிவிப்பில் ரியல் எஸ்டேட் ஆணைய சட்டப்படி பதிவு செய்த கட்டுமான திட்டங்களின் கால வரம்பை புதுப்பிக்க இனி வரும் காலங்களில் கட்டணம் (Fees Fixed For Extending Construction Projects) வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் ஒரு வருடத்திற்கு கட்டுமான திட்டங்களுக்கு பதிவு செய்யும்போது செலுத்திய கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து மீண்டும் 1 ஆண்டு காலம் அவகாசம் தேவைப்பட்டால் பதிவு கட்டணத்தில் இருந்து 20% தொகையை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்