
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Floating Solar Power Plant : மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம்
Floating Solar Power Plant
நிலப் பகுதியில் செய்யக்கூடிய சோலார் மின் உற்பத்தி (Floating Solar Power Plant) திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் உள்ள நீரில் அமைகிறது. கோவை உக்கடத்தில் உள்ள பெரிய குளத்தில் நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய ‘மிதக்கும் சோலார்’ நிலையம் ஆனது, 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து தூதரகம் ஆனது இந்த ‘மிதக்கும் சோலார்’ திட்டத்திற்கு ரூ.72.50 லட்சத்தை 50 சதவீத பங்களிப்பாக வழங்குகிறது. தமிழக அரசு மீதமுள்ள, 50 சதவீதத்தை வழங்குகிறது. தற்பொழுது முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
1.45 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் Floating Solar Power Plant
சோலார் பேனல்களை உக்கடம் பெரியகுளத்துக்குள் (Floating Solar Power Plant) மிதக்க விடும் பணிகளானது துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, 1.45 கோடி ரூபாய் மதிப்பில் 280 சோலார் தகடுகள் 50 சென்ட் நீர் பரப்பில் மிதக்க விடப்பட்டுள்ளன. ஆங்கரிங் முறையில் சோலார் பேனல்கள் மிதக்க விடப்பட்டுள்ளன. சோலார் பேனல்களானது குளத்தில் தண்ணீர் குறையும் போது கீழே செல்லும் வகையிலும், அலையடித்தாலும் எந்த சேதமும் ஏற்படாத வகையிலும் பொருத்தப்பட்டு மிதக்க விடப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுகிறது.
இதுவரை, 60 சதவீத பணிகள் ஆனது முடிவடைந்துள்ளது. மின் இணைப்பு வழங்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. தொடர்ந்து டிரான்ஸ்பார்மர், மற்றும் இன்வெர்ட்டர் அமைக்கும் பணிகள் ஆனது நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைய இன்னும் இரு மாதங்களாகும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உரை
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோயம்புத்தூர் மாநகராட்சியும், ஜெர்மன் நாட்டு நிறுவனமும் இணைந்து இந்த ‘மிதக்கும் சோலார்’ திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ரூ1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சோலார் `மிதக்கும் சோலார்’ மின் உற்பத்தி நிலையம் (Floating Solar Power Plant) மூலம் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்த மின்சக்தியை உருவாக்கும் வழிமுறை என்பது மின்சாரத்திற்கு ஆகும் செலவை விட குறைவானதாகும். தற்பொழுது முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு மாதங்களில் இந்த சோலார் `மிதக்கும் சோலார்’ மின் உற்பத்தி நிலையம் (Floating Solar Power Plant) செயல்பாட்டிற்கு வரும்,” என்றார்.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது