Google Chooses TN to Manufacture Smartphones and Drones : Google ஸ்மார்ட்போன்கள், ட்ரோன்கள் தயாரிக்க தமிழகத்தை தேர்வு செய்கிறது
தமிழகத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய கூகுள் திட்டம். Apple iphone மற்றும் Samsung-களின் தயாரிப்புகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், Google நிறுவனம் தன்னுடைய தயாரிப்பான Pixel ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆதிக்கம் செய்ய மற்றும் பரவலாக்க தமிழ் நாட்டில் ஆலையை அமைப்பது குறித்து நீண்ட நாளாக திட்டமிட்டு வருகின்றது.
இந்த முன்முயற்சியானது நாடு முழுவதும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இதன் முதல் சாதனங்கள் 2024ல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே கணினி (PC) தயாரிப்பாளரான HP உடன் கூட்டு சேர்ந்து சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் வசதியில் குரோம்புக்ஸ் தயாரிப்பதற்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாநிலத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
தற்போது இந்தியாவில் தமிழ்நாடு ஆனது எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. தமிழ் நாட்டின் $9.56 ஏற்றுமதி ஆனது இந்திய நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதாவது இது இந்திய நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 33% ஆகும். இது இந்தத் துறையில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்துகிறது.
மேலும் மோடியின் உற்பத்தி-இணைக்கப்பட்ட நிதிச் சலுகைகள் ஆனது இந்திய நாடு மின்னணு உற்பத்தியாளர்களை ஈர்க்க உதவுகிறது. Apple Inc. புவிசார் அரசியல் அபாயங்களைக் குறைப்பதற்காக சீனாவிலிருந்து விலகிச் செல்லுகிறது. Apple Inc. போன்ற நிறுவனங்களைப் பின்பற்றி, இந்தியாவில் சாதனங்களைத் தயாரிக்கும் திட்டங்களை Google துரிதப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் மீது கூகுள் தனது பார்வையை அமைத்துள்ளது (Google Chooses TN to Manufacture Smartphones and Drones )
ஸ்மார்ட்போன் உற்பத்தியை அமைக்க, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சாதன உற்பத்திக்கான திட்டங்களை விரைவுபடுத்த கூகுளின் முடிவு ஆப்பிள் இன்க் போன்ற நிறுவனங்களின் மூலோபாய நகர்வுகளுடன் ஒத்துப்போகிறது. இந்த வளர்ச்சி, தமிழகத்தின் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானது.
கூகுள் நிறுவனம், தைவானிய ஒப்பந்த உற்பத்தி பங்குதாரரான (கூட்டாளியான) ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்துடன் இணைந்து தனது பிக்சல் மொபைலை தயாரிக்க உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, அதன் துணை நிறுவனமான விங், பிக்சல் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ட்ரோன்கள் தயாரிப்பையும் தமிழ்நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள கூகுள் நிர்வாகத்துடன் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு தங்கள் தமிழ் மாநிலத்தை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. கடந்த ஆண்டு எந்த இடத்தையும் வெளியிடாமல் தனது பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் என்று கூகுள் கூறியது.
ஆப்பிள் சில ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது, மேலும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது. தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உற்பத்தியை இந்தியாவிற்கு நகர்த்துவது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்