Guru Nanak College Shooting Academy : Guru Nanak College-ல் Shooting Academy & Shaheed Bhagat Singh Sports Complex திறக்கப்பட்டது

Guru Nanak College Shooting Academy :

Guru Nanak College ஆனது இந்தியாவில் கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான உயர்கல்வியின் முதன்மையான நிறுவனம் ஆகும். 1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guru Nanak College ஆனது, அதன் பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்து வருகிறது. Guru Nanak College ஆனது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC-National Assessment And Accreditation Council) A கிரேடுடன் அங்கீகாரம் பெற்றுள்ளது. Guru Nanak College ஆனது பல்வேறு துறைகளில் Bachelor’s, Master’s மற்றும் Doctoral Degrees வழங்குகிறது.

மாணவர்கள் நம்பிக்கையுடன் சமூகத்திற்கு பங்களிக்க கல்லூரி அதன் வளாகத்தில் பல State-Of-The-Art Laboratories, Advanced Digital Classrooms மற்றும் Modern Amenities வசதிகளை வழங்குகிறது. Guru Nanak College ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் உலகளாவிய கண்ணோட்டத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள். கல்வி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்டு Guru Nanak College ஆனது மாணவர் சமூகத்தினரிடையே விளையாட்டு நடவடிக்கைகளை பெருமையுடன் ஊக்குவிக்கிறது. Guru Nanak College ஆண்டு முழுவதும் பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளை நடத்துகிறது.

Udhayanidhi Stalin Opened Shaheed Bhagat Singh Sports Complex மற்றும் Saragarhi Shooting Academy :

Guru Nanak College Shooting Academy : Tamil Nadu Minister For Youth Welfare And Sports Development Udhayanidhi Stalin 20/12/2023 அன்று Shaheed Bhagat Singh Sports Complex மற்றும் Saragarhi Shooting Academy-யை Guru Nanak College-ல் திறந்து (Guru Nanak College Shooting Academy) வைத்தார். உதயநிதி பேசுகையில், Guru Nanak College கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் படித்தது லயோலா கல்லூரி என்றாலும் அதிகப்படியான எனது நேரத்தை இந்த கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானம், ஷெட்டில் காக் மைதானத்தில் செலவழித்து உள்ளேன். அதனால் இந்த நிகழ்வுக்கு கேட்டவுடன் நான் ஒப்புக்கொண்டேன். தமிழ்நாடு அரசு கடந்த இரண்டரை வருடங்களில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக நான் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வருடத்தில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றேன்.

 4.5 லட்சம் பேர் முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்றனர். முதல்-அமைச்சர் கோப்பை போட்டியில் 50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்தில் விளையாட்டுத் துறை ஆனது செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சைக்ளோத்தான் போன்ற போட்டிகளை நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் வரும் ஜனவரி 19 முதல் நடைபெற உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தக் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் கேலோ இந்தியா திறந்து வைக்கப்பட உள்ள பயிற்சி மையத்தில்தான் நடைபெற உள்ளது.

Latest Slideshows

Leave a Reply