IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs NZ Test Series) இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை இன்று Board Of Control For Cricket In India (BCCI) அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கான அணியிலிருந்து பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றாலும் இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியில் 4 வீரர்கள் ரிசர்வ் பிளேயர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த 16 வீரர்களில் 15 பேர் நியூசிலாந்து தொடரிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் யஷ் தயால் மட்டும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் பிளேயர்கள் பட்டியலிலும் யஷ் தாயால் இடம்பெறவில்லை. வருகின்ற ஆஸ்திரேலியா சுற்று பயணத்துக்கு இந்தியா ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் என எதிர்ப்பார்த்த நிலையில் யஷ் தாயால் இடம்பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

4 ரிசர்வ் வீரர்கள் :

வங்கதேச தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் தீப் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக தன் இடத்தை தக்கவைத்துள்ளார். முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு வருவாரா என தெரியாததால் அவர் அணியில் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, மயாங்க் யாதவ் ஆகிய 4 பேரும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் நித்திஷ் குமார் மற்றும் மயாங்க் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.      

IND Vs NZ Test Series - 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், அக்‌ஷர் படேல், இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகம் பேசப்படுவது பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது தான். இந்திய அணியில் அனைத்து ஃபார்மட்களிலும் துணை கேப்டன் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்த நிலையில் அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக இந்தியா யாரையுமே அறிவிக்கவில்லை.     

மேலும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என்ற செய்தி பேசப்பட்டு வருகிறது. இதனால் தான் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply