Interesting Facts About Nilgiri Tahr : நீலகிரி வரையாடு பற்றிய சில சுவாரசியமான தகவல்
புலி இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கிறது. தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு (Interesting Facts About Nilgiri Tahr) அதனால் என்னவோ புலிக்கு தரும் முக்கியத்துவத்தை இதுவரை எந்த அரசும் வரையாட்டுக்குக் கொடுத்ததில்லை. இதன் விளைவாக இன்று வரையாடு அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.
Interesting Facts About Nilgiri Tahr
உடல் அமைப்பு
‘வரை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு மலை என்று பொருள். ‘ஆடு’ என்பது இந்த உயிரினம் ஆடு குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை குறிக்கிறது. மலையில் வாழும் ஆடுகள் என்பதன் பொருளில் ‘வரியாடு’ என்ற பெயர் வந்தது. இதைத்தான் சீவகசிந்தாமணி ‘ஓங்கு மால்வரை வரையாடு’ என்று குறிப்பிடுகிறது. உயரமான மலைகளில் அலையும் வரியாடு என்பது (Interesting Facts About Nilgiri Tahr) இதன் பொருள். மற்ற சங்க இலக்கியங்களில் இந்த உயிரினம் ‘வருடை’ என்று குறிப்பிடப்படுகிறது.
நீலகிரி வரையாடுகள் பற்றிய சில தகவல்கள்
இந்த வரையாடு ஆட்டினத்தைச் சேர்ந்தது. உலகில் வேறு எங்கும் காணப்படாத நீலகிரி வரையாடு இந்தியாவில் (Interesting Facts About Nilgiri Tahr) மட்டுமே வாழ்கிறது. இந்த ஆடுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைகளில் காணப்படுகின்றன. இவை தமிழ்நாட்டின் நீலகிரிப் பகுதியில் அதிக அளவில் காணப்பட்டாலும், சிறுவாணி மலை, பழனி மலை, வில்லிபுத்தூர், தேனி, திருநெல்வேலி மலைப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. கேரளாவில் ‘ஹை ரேஞ்ச்’ எனப்படும் மூணாறு மலைப் பகுதியில் குறிப்பாக எரவிக்குளம் தேசிய பூங்காவில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.
இத்தகைய உயரங்களில் பெரும்பாலும் சோலைக் காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. எனவே அவர்களின் உணவில் சுமார் 65 சதவீதம் புற்களைக் கொண்டுள்ளது. தேயிலை மற்றும் காபி போன்ற பணப்பயிர்களின் சாகுபடி, ஒற்றைப்பயிர் விவசாயம், மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத் தீ, மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் சோலை காடுகள் மற்றும் புல்வெளிகள் அழிக்கப்படுகின்றன. இவையே இந்த வரையாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு (Interesting Facts About Nilgiri Tahr) முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் நீலகிரி வரையாடுகள் வேட்டையாடுதல் மற்றும் முறையற்ற சுற்றுலா போன்றவற்றால் அழியும் நிலையில் உள்ளன.
இந்தியாவில் நீலகிரி வரையாடுகளை ஆய்வு செய்த ஷேலர் தனது அனுபவங்களை ‘ஸ்டோன்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அந்த நூலில் அவர் வரையாடுகளை மேகம் போல் அலையும் ஆடுகள் என்று (Interesting Facts About Nilgiri Tahr) தெரிவித்துள்ளார். காரணம் மலை உச்சியில் இந்த ஆடுகள் மேகம் போல் மனிதக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கின்றன. இன்று நீலகிரி ஆடுகள் மேகம் போல் மறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளை வரப்போகும் நம் சந்ததியினரின் எதிர்காலம் மாநில விலங்கை புகைப்படங்களில் மட்டுமே காணும் அவலம் ஏற்படும் நிலையில் உள்ளது.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு