Interesting Facts About Nilgiri Tahr : நீலகிரி வரையாடு பற்றிய சில சுவாரசியமான தகவல்
புலி இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கிறது. தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு (Interesting Facts About Nilgiri Tahr) அதனால் என்னவோ புலிக்கு தரும் முக்கியத்துவத்தை இதுவரை எந்த அரசும் வரையாட்டுக்குக் கொடுத்ததில்லை. இதன் விளைவாக இன்று வரையாடு அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.
Interesting Facts About Nilgiri Tahr
உடல் அமைப்பு
‘வரை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு மலை என்று பொருள். ‘ஆடு’ என்பது இந்த உயிரினம் ஆடு குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை குறிக்கிறது. மலையில் வாழும் ஆடுகள் என்பதன் பொருளில் ‘வரியாடு’ என்ற பெயர் வந்தது. இதைத்தான் சீவகசிந்தாமணி ‘ஓங்கு மால்வரை வரையாடு’ என்று குறிப்பிடுகிறது. உயரமான மலைகளில் அலையும் வரியாடு என்பது (Interesting Facts About Nilgiri Tahr) இதன் பொருள். மற்ற சங்க இலக்கியங்களில் இந்த உயிரினம் ‘வருடை’ என்று குறிப்பிடப்படுகிறது.
நீலகிரி வரையாடுகள் பற்றிய சில தகவல்கள்
இந்த வரையாடு ஆட்டினத்தைச் சேர்ந்தது. உலகில் வேறு எங்கும் காணப்படாத நீலகிரி வரையாடு இந்தியாவில் (Interesting Facts About Nilgiri Tahr) மட்டுமே வாழ்கிறது. இந்த ஆடுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மலைகளில் காணப்படுகின்றன. இவை தமிழ்நாட்டின் நீலகிரிப் பகுதியில் அதிக அளவில் காணப்பட்டாலும், சிறுவாணி மலை, பழனி மலை, வில்லிபுத்தூர், தேனி, திருநெல்வேலி மலைப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. கேரளாவில் ‘ஹை ரேஞ்ச்’ எனப்படும் மூணாறு மலைப் பகுதியில் குறிப்பாக எரவிக்குளம் தேசிய பூங்காவில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.
இத்தகைய உயரங்களில் பெரும்பாலும் சோலைக் காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. எனவே அவர்களின் உணவில் சுமார் 65 சதவீதம் புற்களைக் கொண்டுள்ளது. தேயிலை மற்றும் காபி போன்ற பணப்பயிர்களின் சாகுபடி, ஒற்றைப்பயிர் விவசாயம், மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத் தீ, மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் சோலை காடுகள் மற்றும் புல்வெளிகள் அழிக்கப்படுகின்றன. இவையே இந்த வரையாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு (Interesting Facts About Nilgiri Tahr) முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் நீலகிரி வரையாடுகள் வேட்டையாடுதல் மற்றும் முறையற்ற சுற்றுலா போன்றவற்றால் அழியும் நிலையில் உள்ளன.
இந்தியாவில் நீலகிரி வரையாடுகளை ஆய்வு செய்த ஷேலர் தனது அனுபவங்களை ‘ஸ்டோன்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அந்த நூலில் அவர் வரையாடுகளை மேகம் போல் அலையும் ஆடுகள் என்று (Interesting Facts About Nilgiri Tahr) தெரிவித்துள்ளார். காரணம் மலை உச்சியில் இந்த ஆடுகள் மேகம் போல் மனிதக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கின்றன. இன்று நீலகிரி ஆடுகள் மேகம் போல் மறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளை வரப்போகும் நம் சந்ததியினரின் எதிர்காலம் மாநில விலங்கை புகைப்படங்களில் மட்டுமே காணும் அவலம் ஏற்படும் நிலையில் உள்ளது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்