IPL 2025 Retention Rules: ஐபிஎல் 2025 தொடரில் CSK-வில் தோனி விளையாடுவது உறுதி
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின் மூலம், சென்னை அணிக்காக தோனி அடுத்த சீசனில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய விதிமுறைகள் (IPL 2025 Retention Rules)
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன், 10 அணி நிர்வாகமும் தலா 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பெங்களுருவில் நடைபெற்ற கூட்டத்தில், தக்கவைத்த 6 வீரர்களில் ஒருவர் அன்கேப்ட் பிளேயராக இருக்க வேண்டும் என முடிவு செய்யபட்டுள்ளது. தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வீரராக இருக்க வேண்டும். மீதி இருக்கும் 5 வீரர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
IPL 2025 Retention Rules: தக்கவைத்து வீரர்களுக்கான ஊதியம்
தக்கவைப்பு மற்றும் RTM விருப்பங்களின் மூலமாக ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை வைத்துக் கொள்ளலாம். ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க விரும்பினால், முதல் மூன்று தக்கவைப்புக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடி செலவாகும். இந்த தொகை அனைத்தும் ஏலம் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ரூ.120 கோடியில் இருந்து கழிக்கப்படும். கடைசி 2 தேர்வுகளுக்கு உரிமையாளர் ரூ.18 மற்றும் 14 கோடியை இழக்க நேரிடும். 5 வீரர்களைத் தக்கவைத்தால், ஒரு அணிக்கு ஏலத்தில் ரூ.45 கோடியை வைத்திருக்கும். அதோடு அதிகபட்சமாக 2 அன்கேப்ட் பிளேயர்களை மட்டுமே தக்கவைக்கப்படும். அவர்களுக்கு ஊதியமாக ரூ.4 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 இல் இருந்த ஒரு விதி மீண்டும் ஐபிஎல் நிர்வாகம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அன்கேப்ட் பிளேயராக, 5 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதிப்பர். இந்த விதி முந்திய காலத்தில் பயனில் இல்லை, 2021 இல் நீக்கப்பட்டது. அணி உரிமையாளர்கள் விவாதத்திற்கு பிறகு இந்த விதி மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
சிஎஸ்கே அணியில் தோனி
IPL 2025 Retention Rules விதியின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விரும்பினால், CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைக்கலாம். தோனி 2022 இல் 12 கோடிக்கு 2வது தக்கவைத்து வீரராக இருந்தார். தோனி முன்பு இருந்த போல் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ரசிகர்கள் அவரை பிளேயிங் லெவனில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 43 வயதை அடைந்த தோனி 2020 இல் சர்வதேச ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அந்த வகையில் சென்னை அணியில் அன்கேப்ட் பிளேயராக தோனி விளையாடினாள், அவரது சம்பளம் ரூ.4 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்