Kurinji Malar : குறிஞ்சி மலர் - நா.பார்த்த சாரதி
காதல் :
Kurinji Malar : அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ஒரு பசு தன் கன்றினை விரும்புகிறது. ஒரு ஆணுக்கு, அவனது தொழில், அவனுக்கு இருக்கும் தோழமை, அவன் படிக்கும் புத்தகங்கள், அவனுக்கு பிடித்த கலைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு காதல் கதைகளில் பேசப்பட்டு வருகிறது. நாயகனும் நாயகியும் தங்கள் காதலை நேரடியாக வார்த்தைகளால் வெளிப்படுத்தும் குறிஞ்சி மலரின் முழுக்கதையையும் காதலாக எடுத்துச் சென்றிருக்கிறார் நா.பார்த்தசாரதி. அன்பும் அழகும் அறிவும் நிறைந்த பூரணி நாயகி. மனத்துக் கான் மாசிலாவாக அரவீந்தன் கதாநாயகன். பொதுவாக காதலுக்கு எதிரியாக இருக்கும் அந்தஸ்து, திருமணத்திற்கு தடையாக இருக்கும் செவ்வாய் தோஷம் கூட அவர்கள் காதலை வெளிப்படுத்த விடாமல் தடுக்கிறது. கதையில் எங்கும் நா.பார்த்த சாரதி கதாபாத்திரத்தை கச்சிதமாக நடத்தியிருக்க மாட்டார்.
கதை :
Kurinji Malar : தமிழறிஞரும் லட்சியவாதியுமான பூரணியின் தந்தை ஒரு நாள் சிவனடி சேர, பூரணி தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறாள். அப்பாவின் புத்தகங்களை வெளியிடும் புதுமண்டப அச்சகத்திடம் பணம் கேட்க புத்தகங்களை விற்கவில்லை என்றும் ஏமாற்றுகிறார். பல இடங்களில் வேலை தேடி அலைந்து, பசித்து, சாலையில் மயங்கி விழுகிறாள். மங்களேஸ்வரி அவளை தன் காரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்கம் தெளிவித்து தன் சொந்த காரில் வீட்டிற்கு அனுப்புகிறாள். மீனாட்சி பத்திரிக்கையின் சார்பில் புத்தகங்களை வெளியிடும் அரவிந்தன், பூரணியின் அறிவு மற்றும் பண்புகளால் கவரப்பட்டான், பூரணி ஏழைகள் மீது கொண்ட கருணை, எந்த நிகழ்வையும் புரட்டிப் போடும் திறன் ஆகியவற்றால் அவர் மீது காதல் கொள்கிறார்.
மங்களேஸ்வரியின் மகள் வசந்தா சினிமா ஆசையால் ஓடிவிடுகிறாள், அரவிந்தனும் பூரணியும் மங்கையர் கழகத்தில் தினமும் பண்பாட்டு சொற்பொழிவு செய்கிறார்கள். பூரணி தனது சொற்பொழிவு கேட்பவர் பின்பற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒவ்வொரு முறையும் பூரணி அரவிந்தரிடம் பேசும் போது, இலக்கிய ரசனையை அவளின் தந்தையைப் போன்று சொல்லி இவரை ஆச்சரியப்படுத்துகிறார்.
தேர்தல் கதை :
Kurinji Malar : அரவிந்தன் அவர்களின் முதலாளி பூரணியை தேர்தலில் நிறுத்தலாம் என்று கூறுகிறார். அதற்கு அரவிந்தன் மறுப்பு தெரிவிக்கிறான். புது மண்டபத்துக்காரர் வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதால் பூரணியை தேர்தலில் நிற்க சொல்கிறான் அரவிந்தன். அரவிந்தன் அவர்களின் முதலாளி மங்களேஸ்வரி பூரணியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அவன் சிறிது காலம் காதலித்து வாழலாம் என்று கூறுகிறான். பூரணி தன்னுடைய இலக்கிய சொற்பொழிவுகளால் புகழ் பெற்று இலங்கைக்கு சென்று தமிழை பரப்பி நிறைய பாராட்டுகளை பெறுகிறார். பிறகு அவளுக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வருகிறது.
ஆனால் இங்கு அரவிந்தன் நிலைமையோ மிக மோசமாகி விடுகிறது. பக்கத்து ஊரில் பரவி வரும் விஷ காய்ச்சலால் துன்புறும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவன் கிளம்பி விடுகிறான். புது மண்டபத்துகாரன் அரவிந்தனை மீனாட்சி அச்சகத்தை விட்டு வெளியேற சொல்கிறான். பூரணி மலேசியா சென்று வந்த பிறகு அரவிந்தன் அர்ச்சகத்தை விட்டு வெளியேறியதை அறிந்து வருந்துகிறாள். காய்ச்சலுடன் கவனிக்க ஆள் யாரும் இல்லாமல் இருக்கும் அரவிந்தனை முருகானந்தம் அழைத்து வருகிறான். அரவிந்தன் அவர்கள் தேர்தலுக்காக கண்மூடித்தனமாக செலவு செய்யும் தொகையை பார்த்து மனம் வருந்தி முருகானந்தம் அந்த சுவரொட்டிகளை எல்லாம் எரிக்கிறான்.
ஏனென்றால் முருகானந்தத்திற்கு பூரணி நல்ல வழியில் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறான். பணத்தை செலவு செய்து வெற்றி பெறுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. அதற்கு அரவிந்தன் நாடு எப்படி செல்கிறது நீங்கள் ஏன் இன்னும் மகாத்மா காந்தி வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகிறான். தேர்தல் முடிவு நாளில் எல்லோரும் சென்றுவிட பூரணியும் அரவிந்தம் மட்டுமே வீட்டில் தனிமையில் உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று பூரணியை கொண்டாடும் விதமாக குதிரை வண்டி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. அவரது வெற்றியை கண்டு ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ரசித்தது :
Kurinji Malar : நா.பார்த்த சாரதி அவர்கள் மலர் பூ போன்ற வார்த்தைகளை கூறும் போது நம் உதடுகள் பூ எவ்வாறு மலர்கிறதோ அதனைப் போன்று பிரியும் என்று சொல்லி இருப்பது தமிழ் மொழியின் அழகை வியக்க வைக்கிறது. நிறைய பிள்ளைகளை பெற்று தாய் வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு தகுதியான இடத்திற்கு அனுப்பிவிட்டு தாய் மட்டும் பெருமிதத்தோடு தன் வாழ்ந்த இடத்திலேயே தெய்வமாக மாறிக் கொண்டிருப்பது போல நம் மக்களை அனைவரையும் உலகின் அனைத்து மூளைகளுக்கும் அனுப்பிவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் தமிழ் தாய்.. என்ன அழகான பெருமைமிகு உவமை!
Latest Slideshows
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்