Lok Sabha Election Date Announcement: தமிழகத்துக்கு ஏப்ரல் 19-ம் தேதி லோக்சபா தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!
தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற (லோக்சபா) தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜுன் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நம் இந்திய நாட்டில் 5 ஆண்டுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகின்ற ஜுன் மாதம் 16-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் மீண்டும் லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலங்கள் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தேர்தல் ஆணையர்களாக திரு. ஞானேஷ் குமார், திரு.எஸ்எஸ் சந்து ஆகியோர் புதிதாக பொறுப்பு ஏற்றனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதியானது 16.03.2024 அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் 15.03.2024 அன்று அறிவித்தது. அதன்படி 16.03.2024 அன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் லோக்சபா தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி, தேர்தல் முடிவு தேதிகளை அறிவித்துள்ளனர்.
Lok Sabha Election Date Announcement : மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் தேதி நடைபெற உள்ளது
இதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் மொத்தம் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது மே 7-ம் தேதி 12 மாநிலங்களில் மொத்தம் 94 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
நான்காம் கட்ட வாக்குப்பதிவானது மே 13-ம் தேதி 10 மாநிலங்களில் மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது மே 20-ம் தேதி 8 மாநிலங்களில் மொத்தம் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
ஆறாம் கட்ட வாக்குப்பதிவானது மே 25-ம் தேதி 7 மாநிலங்களில் மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
ஏழாம் கட்ட வாக்குப்பதிவானது ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களில் மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான மறு பரிசீலனை என்பது மார்ச் 28 -ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19-ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்