MHA Wartime Drill Order Tomorrow : அனைத்து மாநிலங்களிலும் நாளை போர்க்கால ஒத்திகையை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஜம்மு காஷ்மீரின் பிரபலமான சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ‘தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்’ எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மேலும் தொடர்ந்து பாகிஸ்தானுடன் எல்லையில் உரசல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளை மே 7-ம் தேதி போர்க்கால (MHA Wartime Drill Order Tomorrow) ஒத்திகையை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போர் ஒத்திகை (MHA Wartime Drill Order Tomorrow)
இந்தியாவில் உள்ள 259 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது. இந்த ஒத்திகையின்போது வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை அமைப்புகள் (சைரன்) சரியாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்படும். மேலும் இந்திய விமானப்படையுடன் தொடர்பு கொள்ள தேவையான ‘ஹாட்லைன்’ மற்றும் ‘ரேடியோ இணைப்புகள்’ மற்றும் ‘கட்டுப்பாட்டு அறைகள்’ சரியாக செயல்படுகிறதா என்று சோதனை செய்யப்படவுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளித்தல் மற்றும் வான்வழி தாக்குதல் ஏற்படும் சமயத்தில் மின்சாரத்தை துண்டித்து எதிரிகளை குழப்புதல் போன்ற பயிற்சிகள் இந்த ஒத்திகையின்போது செய்து பார்க்கப்படும். மேலும் இந்தியாவின் முக்கிய ராணுவ உற்பத்தி மையங்களை மறைப்பது, தொழிற்சாலையை மறைப்பது அதாவது இரவு நேரங்களில் (MHA Wartime Drill Order Tomorrow) உண்மையான தொழிற்சாலையின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு இடத்தில் தொழிற்சாலை இருப்பது போன்று பிரகாசமான விளக்குகளை எரிய விட்டு வான்வழி தாக்குதலின்போது குழப்பம் ஏற்பட்டு உண்மையான தொழிற்சாலை காப்பாற்றப்படும் உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாவட்ட, மாநில அளவில் விழிப்புணர்வு


போர் நடைபெறும் சமயங்களில் பேரிடர் மீட்பு துறை, தீயணைப்பு துறை போன்ற பாதுகாப்பு சேவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும், மக்களை அவசரமாக ஓரிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் (MHA Wartime Drill Order Tomorrow) எனில் சரியாக திட்டமிட்டபடி செய்யப்படுகிறதா என்றும் நாளை சோதனை செய்து பார்க்கப்படவுள்ளது. மேலும் போர் பற்றி மாவட்ட, மாநில அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தாக்குதலுக்கு எதிராக நாம் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த ஒத்திகை நடைபெறவிருக்கிறது.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு