MS Dhoni's Retirement: இதே நாளில் தான் தோனி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்...

MS Dhoni's Retirement - மகேந்திர சிங் தோனி :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களுடைய சுதந்திர தினத்தை கொண்டாடினர். சரியாக அன்று இரவு 7 மணி ஒரு அதிர்ச்சி செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருந்தது.

இன்ஸ்டாகிராமில் தோனி அவர்கள் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாசத்திற்கும் என்னுடைய அன்பான நன்றிகள் என்று கூறியிருந்தார். அடுத்து சில நிமிடங்களில் தான் ஓய்வை அறிவிக்கப் போவதாக கூலாக கூறிவிட்டு சென்றார். அவர் இறுதியாக விளையாடிய சர்வதேச போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போட்டி தான்.

அதில் இந்திய அணி மிகவும் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை சந்தித்தது. தோனியின் கடைசி உலக கோப்பையில் அவருக்காக அந்த உலகக் கோப்பையை வென்று தர இந்திய வீரர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்களுடன் இணைந்து ரசிகர்களும் வெகுவாக காத்துக் கொண்டிருந்தார்கள். இந்திய நாடு முழுவதும் அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள யாராலும் முடியவில்லை. அந்தப் போட்டியின் போது மகேந்திர சிங் டோனி ரன் அவுட் ஆனது பல கோடி மக்களை அழ வைத்தது.

அதன் மூலம் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியிலேயே ரன் அவுட் ஆன தோனி இறுதிப் போட்டியிலும் ரன் அவுட்டாகி கிரிக்கெட் உலகிற்கு விடை கொடுத்தார். அந்த உலகக் கோப்பைக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடாத தோனி அடுத்த வருடத்தில் தன்னுடைய (MS Dhoni’s Retirement) ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்த உடனே சில நிமிடங்களிலேயே அவருடைய நெருங்கிய நண்பர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா அவர்களும் தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இருவரும் ஓய்வு பெற்று இன்றுடன் சரியாக 3 ஆண்டுகள் முடிவடைகிறது.

விக்கெட் கீப்பர் :

அவர் சென்றவுடன் அந்த இடத்தில் விக்கெட் கீப்பராகவும் அதிரடி ஆட்டக்காரராகவும் ரிஷப் பண்ட் விளையாடி வந்தார். ஆனால் அவரும் டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு நாள் தொடரில் தடுமாறி வந்தார். அதிலிருந்து இந்திய அணி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டிங்கை தேடி வருகிறது. சகா, சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், கிஷான் வரை சோதித்துப் பார்த்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2020 உலகக் கோப்பையின் போது தினேஷ் கார்த்திக்கை கூட பயன்படுத்தி விட்டனர். ஆனால் ஒருவரும் தோனியை போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணி மற்றும் இந்திய அணி ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை இப்போது வரை மிஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.

நல்ல ஃபினிஷர் :

இதேபோன்று பினிஷிங் ரோலிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் மகேந்திரசிங் தோனி. இந்த இடத்திலும் தற்போது இந்திய அணி தடுமாறி வருகிறது. அவருக்குப் பிறகு அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா அவர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட போதும் அவரால் அதிகளவு போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்த இடத்திலும் இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் இன்னும் கிடைக்கவில்லை. அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் மட்டுமல்லாமல் பவுலர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துவதிலும் சிறப்பானவர். சாகல் மற்றும் குல்திப் யாதவ் போன்ற வீரர்களுக்கும் இவரே சிறப்பான பயிற்சி வழங்கினார். சர்வதேச கிரிக்கெட் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வாங்கிய ஒரே கேப்டன் இவர்தான்.

Latest Slideshows

Leave a Reply