Nallinakkam Illarodu Inanga Vendam : நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் புத்தக விமர்சனம்
அது ஒரு அழகான சிறிய கிராமம் ஆகும். அந்த அழகான கிராமத்தை சுற்றி பல சிற்றூர்களுக்கு இந்த கிராமம் பல வகையில் ஆதாரமாக திகழ்ந்தது. அந்த கிராமத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தது. அந்த காவல் நிலையத்திற்கு ஒரு உதவி ஆய்வாளர் இடமாற்றத்தில் வந்தார். அந்த கிராமத்தில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவருடைய குடும்பம் அங்கேயே குடியேறியது. உதவி ஆய்வாளருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் பாஸ்கர். அவனை அந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் (Nallinakkam Illarodu Inanga Vendam) சேர்க்கிறார்கள். சுற்றுவட்டார இருபது கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டிய பள்ளியாகவே இந்த பள்ளி இருந்தது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கு படிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
உதவி ஆய்வாளர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலேயே கண்ணையன் என்ற சிறுவனும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்குச் சென்ற இரண்டாம் நாளே கண்ணையன் பாஸ்கருடன் நண்பனானான். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பதால், பள்ளிக்கு செல்வது முதல் வீடு திரும்புவது வரை ஒன்றாகவே (Nallinakkam Illarodu Inanga Vendam) இருக்கின்றனர். படிப்படியாக, பாஸ்கர் மற்ற மாணவர்களுடன் பழகத் தொடங்கினான். கண்ணையனுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (Nallinakkam Illarodu Inanga Vendam)


கண்ணையன் சில மாணவர்களை முஸ்லீம்கள், சிலரை கிறிஸ்தவர்கள், இன்னும் வேறு சிலரை தாழ்ந்தவர்கள் என்று அழைத்து, அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று பாஸ்கருக்கு அறிவுறை கூறினான். அதற்கு பாஸ்கர் வேறு யாராக இருந்தால் என்ன எல்லோரும் ஒரே பள்ளியில் (Nallinakkam Illarodu Inanga Vendam) தானே படிக்கிறோம், பழகுவதில் என்ன தவறு என்று கேட்டான். வீட்டிலும் அம்மா, அப்பாவிடம் கண்ணையனைப் பற்றி கூறினான். அவர்களும், யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது, நீங்கள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும். யாராவது ஒருவர் நம்மை தனியாக விட்டுவிட்டால், நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ அதே அளவுக்கு அவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே நீ அனைவரிடமும் சமமாக நடந்துகொள்ள வேண்டும். அடுத்த சில நாட்களில், சிலருடனான நட்பை முறித்துக் கொள்ளுமாறு பாஸ்கரை கண்ணையன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். பாஸ்கர் இணங்கவே இல்லை.
பள்ளியின் வகுப்பறையில் உலக நீதியை ஒரு பாடமாக தமிழ் ஆசிரியர் கற்பித்தார். நல்லிணக்கம் இல்லாதவருக்கு இணங்கக்கூடாது (Nallinakkam Illarodu Inanga Vendam) அவர் நட்பாக இல்லாவிட்டாலும், அதைப் பற்றி யாரும் கவலைப்படக்கூடாது. இவ்வாறு பாகுபாடு காட்டுபவர்கள் மக்கள் மத்தியில் புற்றுநோயைப் பரப்புபவர்கள் என்று அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா