New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வரும் மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும், இனி கூடுதல் கட்டணங்களை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறை (New Rules From May 1st ATM Withdrawal Charges) நடைமுறைக்கு வரவுள்ளது. எப்போதும் வழக்கமாக ஏடிஎம் சேவையை பயன்படுத்தும் டெபிட் கார்டு (Debit card) பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் (New Rules From May 1st ATM Withdrawal Charges)

May 1st ATM Withdrawal Charges - Platform Tamil

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்திற்கு மேல், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. ஏடிஎம் கார்டு பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த இலவச பரிவர்த்தனை வரம்புகளுக்கு (New Rules From May 1st ATM Withdrawal Charges) அப்பால் பணம் எடுக்கும் பொழுது இந்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம் பயன்பாட்டில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அங்கீகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் செலவுகள் அதிகரித்து (New Rules From May 1st ATM Withdrawal Charges) வருவதால் சேவை விநியோகத்தை சமநிலைப்படுத்துவதவும், ஏடிஎம் உள்கட்டமைப்பை ஊக்குவிக்கவும் இந்த கூடுதல் கட்டணம் கைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக சென்னை மெட்ரோ நகரங்களில் சொந்த வங்கி ஏடிஎம் (Own Bank ATM) சேவையை பயன்படுத்த ஓரு மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது. (New Rules From May 1st ATM Withdrawal Charges) மேலும் தற்போது ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைகளுக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் மே 1-ம் தேதி முதல் இது ரூ.25 ஆக உயரப்போகிறது. மேலும் மெட்ரோ நகரங்களில் பிற வங்கி ஏடிஎம் (Other Bank ATM) சேவையை பயன்படுத்த ஒரு மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தற்போது ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு ரூ.21 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் மே 1, 2025-ம் தேதி முதல் ரூ.25 ஆக இந்த கட்டணம் உயரப்போகிறது. மேலும் ஒருவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் அதை ஏடிஎம் சேவை மூலம் தெரிந்து கொண்டதற்காக இனி கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply