Nipah Virus Hit Kerala : ஆறாவது முறையாக நிபா வைரஸ் ஆனது கேரளாவை தாக்கி உள்ளது
2018 ஆம் ஆண்டு முதல் கேரளா மாநிலத்தை ஆறு முறை நிபா வைரஸ் (Nipah Virus Hit Kerala) ஆனது பாதித்து உள்ளது. பாண்டிக்காட்டில் உள்ள மலப்புரத்தின் திருவாலி பஞ்சாயத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞன் இந்த முறை தாக்கப்பட்டு 15/09/2024 அன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளான்.
Nipah Virus Hit Kerala - நிபா என்றால் என்ன என்ற காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகள் :
நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஆனது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இது குறிப்பாக பழ வெளவால்கள், பன்றிகள், அசுத்தமான பழங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவி அதன்பின்பு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. முதன்முதலில் 1998 இல் மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்த வைரஸ் ஆனது கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தின் பெயர் ஆனது இந்த நோய்க்கு சூட்டப்பட்டது. வாந்தி, தலைவலி, தசை வலி, தொண்டை வலி, தலைச்சுற்றல், தூக்கம் மற்றும் மாற்றப்பட்ட நனவு ஆகியவை நிபாவின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் ஆனது பின்னர் கடுமையான சுவாச பிரச்சனைகள், வித்தியாசமான நிமோனியா மற்றும் மூளையழற்சி போன்ற நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் இந்த அறிகுறிகள் ஆனது அறிகுறியற்ற தொற்று முதல் கடுமையான சுவாச தொற்று வரை இருக்கும்.
நிபா நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் :
- தற்போது நிபா நோய் பரவாமல் தடுக்க நிபா வைரஸுக்கு தடுப்பூசிகளோ மற்றும் மருந்துகளோ இல்லை. மனிதர்கள் நோய் வாய்ப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் நிபா நோய் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் மற்றும் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- கேரளாவில் தற்போது 150க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர், அவர்களில் இருவர், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.
- மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் இருக்கின்ற கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இப்பகுதியில் இருக்கின்ற கடைகள் ஆனது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இப்பகுதியில் இருக்கின்ற மக்கள் அனைவரும் கட்டாயமாக முகமூடிகள் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பை எல்லையோர மாவட்டங்களில் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மலப்புரம் மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Latest Slideshows
-
Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது