No Of Wards In Chennai Will Be Increased : சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் :
தமிழகத்தின் தலைநகரமாக திகழ்கின்ற சென்னையில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது. தற்போது சென்னை மாநகரில் 200 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வசிக்கின்றனர். எனவே சென்னையில் உள்ள 200 வார்டுகளை அதிகப்படுத்தி 300 ஆக உயர்த்தி மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான செயல்பாடுகள் (No Of Wards In Chennai Will Be Increased) நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சி மேம்பாட்டுப் பணிகள் :
குறிப்பாக சென்னை மாநகராட்சி மேம்பாட்டிற்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- அதன்படி, சென்னை மாநகராட்சியில் இந்த 2024 ஆம் ஆண்டு பள்ளிக் கட்டடங்கள் ஆனது ரூ.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதோடு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 16 புதிய பள்ளிக் கட்டிடங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தமாக 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் ஆறு நவீன விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய பாலம் மற்றும் மேம்பாலங்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படும்.
- ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 10 நீர்நிலைகள் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரிப்பன் கட்டட வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச தரத்தில் அண்ணாநகர் டவர் பூங்கா ஆனது மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தீவுத்திடலுக்காக ரூ.50 கோடி நிதியில் அறிவிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையம் அமைக்கும் புதிய திட்டம் ஆனது தற்போது ரூ.104 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 5 ஏக்கர் நிலம் நிரந்தர கண்காட்சி வளாகம் மற்றும் கடைகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 400 கடைகள் கட்டப்பட உள்ளன. ஒரே இடத்தில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள், பல வகையான உணவுகள், கேளிக்கை அம்சங்கள் என அத்தனையும் காண முடியும். இதற்காக தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்படும். மேலும் நிரந்தர கண்காட்சிக்கூடம் சிப்பி வடிவில் கட்டப்பட உள்ளது.
இந்த புதிய அறிவிப்புகளை (No Of Wards In Chennai Will Be Increased) அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்தபோது வெளியிட்டார்.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு