One Station One Product Project : 483 ரயில் நிலையங்களில் ‘One Station One Product’ Stalls
483 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் விற்பனை அரங்குகள் :
தெற்கு ரயில்வேயின் 483 ரயில் நிலையங்களில் மத்திய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் (One Station One Product Project) நெசவாளர்கள், கைவினைஞர்களின் படைப்புகள், உற்பத்திப் பொருட்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு ஆனது உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகளை பிரபலப்படுத்தும் வகையிலும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (One Station One Product Project) திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மத்திய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு புடவைகளின் விற்பனை அரங்கு ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி அன்று அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல ரயில் நிலையங்களிலும் பல்வேறு அரங்குகள் ஆனது படிப்படியாக அமைக்கப்பட்டன. இதுவரை தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் இருக்கும் 90-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் அரங்குகள் ஆனது அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்ட அரங்குகளில் வேளாண் உற்பத்திப் பொருட்கள், பால், உணவு வகை, கைவினைப் பொருட்கள், கைத்தறி, ஜவுளிகள், பழங்குடியினரின் படைப்புகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், ராணிப்பேட்டை தோல் தயாரிப்புகள் என மொத்தம் 350 உற்பத்திப் பொருட்கள் ஆனது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (One Station One Product Project) திட்ட அரங்குகள் திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.7.64 கோடிக்கு விற்பனை ஆனது நடந்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பல ரயில் நிலையங்களில் தற்போது இதுபோன்ற விற்பனை அரங்குகள் ஆனது அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
One Station One Product Project குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கருத்துக்கள் :
‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டம் மூலம், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச கட்டணமாக 15 நாட்களுக்கு ரூ.1,000 செலுத்தி விற்பனை அரங்குகளை அமைத்து விற்பனை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு பிறகு, அவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பித்து வணிகம் செய்யலாம். இந்த One Station One Product Project மூலம் அவர்கள் குறிப்பிடத்தக்க நல்ல வருவாயை ஈட்டி வருகின்றனர். இந்த ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் தொடக்கத்தில் 94 ரயில் நிலையங்களில், உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள், சுயஉதவிக் குழுவினரின் விற்பனை அரங்குகள் ஆனது அமைக்கப்பட்டன. தற்போது இதற்கு நல்ல வரவேற்பு ஆனது இருக்கிறது. எனவே, இந்த ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டம் ஆனது,
- சென்னை ரயில்வே கோட்டத்தில் 133 நிலையங்கள்
- மதுரை ரயில்வே கோட்டத்தில் 95 நிலையங்கள்
- திருச்சி ரயில்வே கோட்டத்தில் 93 நிலையங்கள்
- சேலம் ரயில்வே கோட்டத்தில் 41 நிலையங்கள்
- திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 65 நிலையங்கள்
- பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 56 நிலையங்கள்
என தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களிலும் மொத்தம் 483 நிலையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, விற்பனை அரங்குகளை (One Station One Product Project) ரயில் நிலையங்களில் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விற்பனை அரங்குகள் ஆனது அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் உருவாக்கிய வடிவமைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை கூறினர்.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்