
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
PM Kissan Yojana-வின் முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் (PM Kissan Yojana) :
அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் (பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா – PM Kissan Yojana) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி ஆனது செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தின் மூலம் ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் ஆனது பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகின்றது.
இதன் மூலம் நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் (PM Kissan Yojana) ஆனது வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் இதன் மூலம் நாடு முழுவதும் பயனடைந்துள்ளனர். மொத்தமாக இவர்கள் மட்டும் ரூ.53,600 கோடி நிதியை பெற்றுள்ளனர். 15 தவணைகளாக இந்த நிதியுதவியை பெற்று தற்போது 16வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மிக முக்கிய அறிவிப்பு :
மத்திய அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த 2024 வருடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், மேலும் வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக இது உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த 2024 வருடத்தில் 16வது தவணையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் (PM Kissan Yojana) விவசாயிகள் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது. வருகிற 31.01.2024-ல் இதற்கான கடைசி தேதி ஆகும். அதனால், தகுதியுள்ள விவசாய மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள். இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
பிஎம் கிசான் திட்டத்தில் பலனடையும் விவசாயிகள் ஆதார் நம்பரை உறுதி செய்து கொள்ள வேண்டும் :
பிஎம் கிசான் (PM Kissan Yojana) திட்டத்தில் பலனடையும் விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் நம்பரை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ள வேண்டும். அருகிலுள்ள பொது சேவை மையத்தில் விவசாயிகள் தங்களுடைய பெயரை பிஎம் கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டும். அப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து, பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும் அல்லது விவசாயிகள் பொது சேவை மையத்தில் உள்ள கருவியில், தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் அல்லது விவசாயிகள் தங்களது போனிலேயே ஆன்லைனில், http://pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் e-KYC என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான (PM Kissan Yojana) கூடுதல் விவரம் ஏதாவது விவசாயிகள் அறிய விரும்பினால் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது