PM Modi Calls For UPI Payment : டிசம்பரில் UPI-ஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய மோடி அழைப்பு

PM Modi Calls For UPI Payment - டிசம்பர் மாதம் முழுவதும் UPI-ஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யணும் :

வரும் டிசம்பர் மாதம் முழுவதும் அனைத்து விதமான பணம் கொடுப்பதற்கும் UPI-ஐ (PM Modi Calls For UPI Payment) பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மற்றும் அதன் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி அழைப்பு ஏன்?

2014 முதல் ‛மான் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி பற்றியும் மற்றும் சேவைகளில் ஈடுபடும் நபர்களை பாராட்டியும் பிரதமர் மோடி பேசி வருகிறார். சமீபத்திய மான் கீ பாத்தின் 107 வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா குறித்தும் மற்றும் UPI-ஐ பணப்பரிவர்த்தனை (PM Modi Calls For UPI Payment ) பற்றி அதிகம் பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது :

இந்தியாவில் கடந்த மாதங்களில் UPI-ஐ மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை ஆனது அதிகரித்துள்ளது. 2022  தீபாவளியை தொடர்ந்து 2023  தீபாவளியில் 2வது முறையாக மக்கள் கைகளில் பணம் வைத்து செலவழிப்பதை குறைத்து UPI-ஐ பணபரிவர்த்தனையை (PM Modi Calls For UPI Payment) மேற்கொண்டுள்ளனர். தற்போது மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகளவில் நம்பி இருப்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. இது வரும் டிசம்பர் மாதத்தில் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் டிசம்பர் மாதம் முழுவதும் UPI-ஐ தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும்’ என்றார். இதன் மூலமாக  இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொருவரும் UPI-ஐ மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்வோம் என மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply