
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Powerful Earthquake Hits Myanmar : மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளைத் தாக்கிய சக்திவாந்த நிலநடுக்கம்
இந்திய நேரப்படி முதலாவது பூகம்பம் சுமார் முற்பகல் 11.50 மணியளவில் 7.7 ரிக்டரில் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளைக் (Powerful Earthquake Hits Myanmar) குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆனது மியான்மரை மையம் கொண்டு ஏற்பட்டுள்ளது. மியான்மரின் மையப் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆனது ஏற்பட்டுள்ளது.
மேலும் வியட்நாமில், ஹனோய் மற்றும் ஹோசிமின் என இரண்டு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆனது உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆனது தாய்லாந்து தலைநகர் (Powerful Earthquake Hits Myanmar) பாங்காக்கிலும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் இன்று நண்பகல் 1.30 மணியளவில் 6.4 என்ற ரிக்டர் அளவில் அடுத்த பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்து ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்க பாதிப்புகள் (Powerful Earthquake Hits Myanmar)
இந்த நிலநடுக்கத்தால் பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. கட்டிட பணியில் இருந்த 43 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை தெரியவில்லை. இடிபாடுகளில் விழுந்த கட்டடங்களில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை (Powerful Earthquake Hits Myanmar) தேடும் பணி நடக்கிறது. அதிகாரப்பூர்வமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பெயர் பெற்ற 17 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பாங்காக் பகுதியானது பலத்த பாதிப்பை அடைந்துள்ளது. உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் உண்டானதால், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஹோட்டல்களில் இருந்த மக்கள் படிக்கட்டிகள் வழியாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் (Powerful Earthquake Hits Myanmar) இருந்த நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேறி பீச்சியடிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் வலுவாக இருந்துள்ளது. பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சீட்டுக் கட்டைப் போல கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து விழுவதும், அதை எதிர்பார்க்காத அங்கு நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓடுவதும் வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது. தாய்லாந்துக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இதுவரை எந்த இந்திய குடிமகனும் சம்பந்தப்பட்ட எந்தவொரு அசம்பாவித சம்பவமும் பதிவாகவில்லை.


தாய்லாந்து எமர்ஜென்சி நிலை அறிவிப்பு
மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வசதியாக தாய்லாந்து பாங்காக்கில் எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு தான் மியான்மர். நாட்டின் (Powerful Earthquake Hits Myanmar) ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 5.41 கோடி தான். அங்கு ராணுவ ஆட்சியே அமலில் இருக்கிறது. மியான்மரில் உள்நாட்டுப் போரால் பேரழிவிற்கு உள்ளான சாகிங் பகுதியில் தான் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்த பகுதிக்குச் செல்ல முறையான சாலை வசதிகள் கூட இல்லை. இதனால் அங்குப் பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்து நாட்டின் பங்குச் சந்தை மூடப்பட்டுள்ளது. டிரேடிங் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மட்டுமின்றி நாட்டின் பரவலான பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது