Powerful Solar Storm: பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த காந்த புயல் !
பூமியை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் தாக்கி உள்ளது.
அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் அறிக்கை
அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்துஇருந்தது.
Powerful Solar Storm: நாசா தெரிவித்தள்ள அறிக்கை
மே 10, 2024 அன்று அதிகாலை 2:54 மணிக்கு சூரியன் ஒரு வலுவான சூரிய புயல் ஒன்றும் உற்பத்தியானது என்றும் அது இந்தவாரம் இறுதிவரை நீடிக்க உள்ளதாகவும் நாசா அறிவித்து இருந்தது.
சூரியப்புயல் (Powerful Solar Storm) காரணம்
சூரியனின் சக்தியானது 11 வருடத்திற்கு ஒருமுறை அதிகரித்து சூரியனிலிருந்து வரும் வெப்ப கதிர்களின் (காந்தப்புயல், சூரிய புயல், மின்காந்தபுயல்) தாக்கமானது வலுவானதாக இருக்கும்.
இந்த புயல் ஆனது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் காந்த மயமாக்கப்பட்ட பிளாஸ்மா வெடிப்புகளான கொரோனல் மாஸ் வெளியேற்றங்கள் (CME) என்ற வரிசையின் மூலம் உருவாகியுள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் புவி காந்த புயல் கடுமையான முதல் தீவிர சூரிய புயல்களின் ஒரு பகுதியாக மார்ச் 1989 இன் தொடக்கத்தில் இருந்து நடுப்பகுதி வரை ஏற்பட்டது. மார்ச் 13 அன்று பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ஹைட்ரோ-கியூபெக்கின் மின்சார பரிமாற்றத்தை ஒன்பது மணிநேரம் நிறுத்தியது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மிக சக்தி வாய்ந்த சூரிய புயல் இன்று பூமியை தாக்கியுள்ளது.
வானில் கண்கவர் ஒளிக்காட்சிகள்
உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் கண்கவர் ஒளிக்காட்சிகள் தோன்றியுள்ளன.
துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றி பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகளை ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை பார்க்க முடிந்தது.
சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகளை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர்.
எதிர்பார்க்கப்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும்
- இந்த ஒளிக்காட்சிகள் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் மற்றும் மின்சார வலையமைப்புகளில் சாத்தியமான இடையூறுகள் ஏற்படும்
- GPS வழி செலுத்தல், தகவல் தொடர்பு சமிக்ஞைகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகியவற்றை பாதிக்கும்.
- புயலின் தீவிர காந்தப்புலம் நீண்ட மின் கம்பிகளில் மின்சாரத்தை உருவாக்கி, மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பூமியில் இருக்கும் எலட்ரானிக் மின் சாதனங்கள் பழுதுபட வாய்ப்புள்ளது.
- சூரிய புயலின் நீடித்த விளைவுகள் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.
பாதிப்புகளின் அளவு இன்னும் நிச்சயமற்ற நிலையில், நிபுணர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகின்றனர்.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்