
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
Properties Sold Without Registration Up To Fine : பதிவு செய்யாமல் விற்கப்படும் மனைகளுக்கு அபராதம் என ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவிப்பு
பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு, கட்டிடம் மற்றும் மனைகளுக்கு ரூ.15000 வரை அபராதம் விதிக்கப்படும் (Properties Sold Without Registration Up To Fine) என ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. வீடு மற்றும் மனைகளில் உருவாகும் சிக்கல்களை களைவதற்காக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டத்தை உருவாக்கியது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
இதன் அடிப்படையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை 112-ன் கீழ் கட்டிடம், மனை விற்பனை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Real Estate Regulatory Authority (RERA) செயல்பட்டு வருகிறது. மேலும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யவும், புகார்களை விசாரிக்கவும், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் ஏற்படுத்தவும் கடந்த 2016-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5381 சதுர அடி அல்லது 8 வீடு மனை இருந்தால் அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் கட்டாயமாக (Properties Sold Without Registration Up To Fine) பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு மற்றும் மனையை விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது புகார் வரும்போது குறைந்தது 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை அபராதம் (Properties Sold Without Registration Up To Fine) விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறையை மாற்ற ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
15000 ரூபாய் அபராதம் (Properties Sold Without Registration Up To Fine)
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை போன்ற பெருநகர பகுதிகளில் பதிவு செய்யாமல் விற்கப்படும் மனைகளுக்கு ரூ.15000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி, ஈரோடு, தாம்பரம், வேலூர், தஞ்சாவூர், ஆவடி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் ரூ.12000 அபராதம் (Properties Sold Without Registration Up To Fine) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.4000 ஆயிரமும், ஊராட்சிகளுக்கு ரூ.3000 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller