
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Rajinikanth Donates Ambulance: 8 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினி
21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகருக்கு நடிகர் ரஜினி ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் 37 வயதாகும் இவர் 16 வயதில் இருந்ததே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் செய்யும் சமூக சேவையானது மிகவும் கடினமானது.
ஆதரவற்ற முதியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது உடல்கள் பல நாட்களாக அரசு மருத்துவமனை பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கின்றன. யாரும் பெற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள். இப்படி பரிதாபக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை காவல்துறையின் அனுமதியுடன் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார்.
மணிமாறன் இந்த பணியை கடந்த 21 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். இதுவரை அவர் 2,045 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். மணிமாறனின் சேவையை பாராட்டி மத்திய மற்றும் மாநில அரசு விருது வழங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களால் பாராட்டப்பட்ட இவர், உலக சாதனையாளர் விருது மற்றும் கவுரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரை அப்துல் காலம் மற்றும் ரஜினி ஆகியோர் வாழ்த்தினர். கொரோனா காலத்திலும் மணிமாறன் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்தார். ஏழை நோயாளிகளுக்கும் முன்வந்து சேவை செய்தார்.
ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினி
இதையறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறனின் சேவையை மனதார பாராட்டி ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்கினார். மணிமாறன் மக்களை தொடர்ந்து சேவை செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஆம்புலன்சை பெற்றுக்கொண்ட மணிமாறன் கூறியது
நடிகர் ரஜினிகாந்த் அளித்த ஆம்புலன்சை பெற்றுக்கொண்ட மணிமாறன் கூறியதாவது, ஆதரவற்ற உடல்களை 21 ஆண்டுகளாக அடக்கம் செய்து வருகிறேன். வாடகை வேன்களில் உடல்களை ஏற்றிச் சென்றேன். இந்த நிலையில் எனது சேவையை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்பு கொண்டு என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை தயாராக இருக்கச் சொன்னார்கள். அவர்களுக்காக திருவண்ணாமலையில் காத்திருந்தேன், காலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து உதவியாளரின் காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கிருந்து என்னை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு எனக்கு முதலில் உணவு பரிமாறினார்கள்.
நான் ரஜினியிடம் 20 நிமிடம் பேசினேன். அவர் எனது சேவையை பாராட்டினார். மேலும் அவர் எனக்கு ஒரு ஆம்புலன்சை பரிசாக கொடுத்தார். எப்படி இவ்வளவு நாள் இந்தப் பணியில் ஈடுபட முடிந்தது என்று கேட்டார். மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியமானது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரிடம் ஆசி பெற்றேன். ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் கொடுத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. அவருடைய உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் மூலம் ஆதரவற்றவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல முடியும். மேலும் வயதானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இதைப் பயன்படுத்தலாம். என்று தெரிவித்தார்.