Republic Day 2024 : தேசிய கொடியை 24 மணி நேரமும் கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம்
Republic Day 2024 - புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு :
2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று நாட்டின் 75-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த குடியரசு தின விழாவின் (Republic Day 2024) போது ஓவ்வொரு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். கடந்த இரண்டு மாதங்களாக, குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய அரசாங்கம் இடைவிடாது தயாராகி வருகிறது. இந்நிலையில் குடியரசு தினவிழாவின் போது தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெறுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா பேரணியில் நம் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.
தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. மிகுந்த கலைநயத்துடன் தயாராகி உள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம் பெறுகிறது. மகளிர் உரிமைத்தொகை மற்றும் புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள், மனுநீதி சோழன் குறித்த ஊர்தி, குடவோலை முறையை காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த நாளை குறிக்கும் நாளாகும். நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமை தனத்தில் இருந்து விடுதலை அடைந்து தனி நாடாக உள்ளது. அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த நாளை கொண்டாடும் நாளாகும்.
இந்நாளில் மத்திய ரயில் நிலையம், விமான நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்படும். இதனிடையே கம்பத்தில் உயர பறக்க விடப்படும் இந்த தேசிய கொடிகள் ஒரு சில நேரங்களில் காற்று இல்லாமல் கம்பீரமாக காணப்படாமல் சுருண்டு கிடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு 75-வது குடியரசு தின விழாவையொட்டி (Republic Day 2024) கோவையை சேர்ந்த காற்று நிறுவனமானஎல்ஜி (LG) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து எல்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ஜெயராம் வரதராஜ் கூறுகையில் சுமார் 12 லட்சம் மதிப்பில் 200 அடி கம்பத்தில் தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏர் கம்ப்ரசர் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். இது முற்றிலும் வியாபாரத்துக்கு அல்ல. இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே இந்த திட்டத்தின் செயல்முறைகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller
-
First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது