
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
Rinku Singh Will Miss T20 World Cup : உலக கோப்பையில் ரிங்கு சிங் இடம் பெறுவாரா?
மும்பை :
டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ரிங்கு சிங் இன்னும் அணியில் இடம் பெறுவார் என சில நாட்களுக்கு முன்பு செய்திகள் (Rinku Singh Will Miss T20 World Cup) வெளியாகின. இருப்பினும் 2024 ஐபிஎல் தொடருக்கு பிறகு அவர் அணியில் உள்ள 11 வீரர்களில் ஒருவராக இடம் பெறுவது சந்தேகம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி வருகையால் பல வீரர்கள் அணியில் வாய்ப்பை இழக்கும் நிலையில் ரிங்கு சிங் ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் அணியில் நீடிப்பார் என கூறப்பட்டது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும், முன்பு போல் முழு உடற்தகுதியுடன் பந்துவீசினால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் கிடைக்கும்.
Rinku Singh Will Miss T20 World Cup :
இருப்பினும் டி20 அணியில் குழப்பம் நீடிப்பதால் பிசிசிஐ தேர்வுக் குழு 30 வீரர்களை தேர்வு செய்துள்ளது. 2024 டி20 தொடருக்கான அணியில் இடம் என்பது 2024 ஐபிஎல் தொடரில் அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பொறுத்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் உறுதியான நிலையில், ஐந்தாவது மற்றும் ஆறாவது வரிசையில் இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களை களமிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு விக்கெட் கீப்பரும் இடம் பெற வேண்டும்.
ரிங்கு சிங் ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் விளையாட வேண்டும். ரிஷப் பந்த் அல்லது ஜிதேஷ் சர்மா அந்த இரண்டு இடங்களில் விக்கெட் கீப்பராக விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர்களான இஷான் கிஷான், கே.எல்.ராகுல் ஆகியோர் ஃபினிஷர்களாக பார்க்கப்படாததால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது. இன்னும் ஒரு இடத்தில் ரிங்கு சிங் அல்லது ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டும். ரிங்கு சிங் மட்டுமே பேட்ஸ்மேன். ஆனால் பாண்டியா ஒரு வேகப்பந்து வீச்சாளர். அதில்தான் பிரச்சனை இருக்கிறது.
நான்கு பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் ஐந்து பந்து வீச்சாளர்கள் கொண்ட அணி. ஆனால் அணியில் ஆறு பந்து வீச்சாளர்கள் இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயம். சில நேரங்களில் ஒரு பந்து வீச்சாளர் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் போது, ஒரு மாற்று பந்து வீச்சாளர் அணியில் இருப்பது கடைசி ஓவர்களில் போட்டியை மாற்ற உதவும். அதன்படி பாண்டியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு முழு வீச்சில் பந்துவீசினால் 2024 ஐபிஎல் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ரிங்கு சிங் மாற்று வீரராக அணியில் நீடிப்பார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தாலும் அணியில் இடம் இல்லை என்று ஓரங்கட்டப்பட வாய்ப்புகள் அதிகம்.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller