Sachet Mobile App : ஸ்மார்ட்போன் பயனர்கள் சாச்செட் மொபைல் ஆப்ஸ் கருவியை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியாவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் சாச்செட் ஆப்ஸ் என்ற புதிய மொபைல் ஆப்ஸை (Sachet Mobile App) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த சாச்செட் ஆப்ஸ் என்றால் என்ன? இந்த மொபைல் ஆப்ஸை ஏன் இந்திய மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற முழு தகவல்களை பார்க்கலாம்.

சாச்செட் மொபைல் ஆப்ஸ் (Sachet Mobile App)

வழக்கம் போல் மன் கி பாத் நிகழ்ச்சில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல முக்கியமான தகவல்களை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார். அதில், சாச்செட் ஆப்ஸ் என்ற மொபைல் ஆப்ஸ் ஏன் முக்கியமானது என்பதை பற்றி அவர் எடுத்துரைத்தார். சாச்செட் மொபைல் ஆப்ஸ் என்பது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (National Disaster Management Authority) உருவாக்கப்பட்ட ஒரு தேசிய பேரிடர் எச்சரிக்கை போர்டல் மற்றும் மொபைல் செயலி (Sachet Mobile App) ஆகும். இந்த சாச்செட் மொபைல் ஆப்ஸ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்கள் தொடர்பாக நிகழ்நேர எச்சரிக்கையை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வரவழைக்கும் மொபைல் கருவியாகும். மேலும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் (Location) இயற்கை பேரிடர் எழும் அபாயம் இருந்தால் உங்களுக்கு உடனே ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பும். இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Sachet Mobile App - Platform Tamil

Sachet ஆப்ஸை பயன்படுத்துவது எப்படி

இயற்கை பேரிடர்களான கனமழை, சூறாவளி, வெள்ளம், பூகம்பம் போன்ற அனைத்து விதமான பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை இந்த சாச்செட் மொபைல் ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு உடனுக்குடன் அனுப்பும். மேலும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது நீங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற முழு தகவல்களையும் இந்த ஆப்ஸ் (Sachet Mobile App) உங்களுக்கு வழங்கும். ஆண்ட்ராய்டு பயனர்கள் எப்போதும் போல நேரடியாக Google Play Store இலிருந்து இந்த சாச்செட் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து GPS location-னை ON செய்து பயன்படுத்தலாம். ஐபோன் மற்றும் ஐஓஎஸ் பயனர்களாக இருந்தால் Apple App Store இலிருந்து பதிவிறக்கம் செய்து பிறகு GPS location-னை ON செய்து பயன்படுத்தலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply