Tamil Nadu Startup Incubator Conference : தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் மாநாட்டின் சிறப்புகள்
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் ஆனது தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக அரசு இந்த நிறுவனங்களை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், புதிதாக தொடங்குபவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான இன்குபேட்டர்கள் வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆனது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சமீபத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் மாநாடு (Tamil Nadu Startup Incubator Conference) ஆனது நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்.
Tamil Nadu Startup Incubator Conference - தமிழ்நாட்டில் ஸ்டாட் அப் நிறுவனங்கள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு உரை :
- 2021ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஸ்டாட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 2300 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது ஸ்டாட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 7600-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதில் 50% ஸ்டாட் அப் நிறுவனங்கள் ஆனது பெண்கள் நிர்வகிக்கும் ஸ்டாட் அப் நிறுவனங்கள் ஆகும்.
- தமிழ்நாட்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான உலகின் தலைசிறந்த இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆனது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மற்றும் அதற்காக தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் வளர் காப்பகங்களை பயன்படுத்த நிதி உதவி, தொழில் வளர் காப்பகங்களுக்கு வளர் நிதி, தொழில் வளர் காப்பகங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை வழங்கினார்.
- 15 மகளிருக்கு மகளிர் ஸ்டார்ட்அப் திட்டத்தில் தொழில்காப்பு நிதியாக ரூ.14.70 லட்சம் வழங்கப்பட்டது. 15 தொழில் வள காப்பகங்களை வளர்க்க தலா ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.75 லட்சம் நிதியுதவி ஆனது அளிக்கப்பட்டது.
- Smart Card ஆனது மனித வளம், நிதி மேம்பாடு, ஊடக விளம்பரங்களை சலுகை விலையில் பெற என 52 தொழில் வள காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக ஸ்டார்ட் அப் துறை ஆனது இந்த Smart Card-டில் சில சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான சில சேவைகளை பெறும் போது, அதன் விலையில் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
- ரூ.13.95 லட்சம் நிதி ஆனது பசுமை தொழில்துட்பம், மகளிர் தொழில் முனைவோர் என 132 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கும் நிதி ஆனது வழங்கப்பட்டுள்ளது.
- இளம் தொழில் முனைவோரை அதிக அளவில் உருவாக்குவதற்கு தமிழக அரசு ஆனது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி சார்ந்த சேவை எளிதில் பெரும் வகையில் HDFC Bank, Federal Bank, SBI Bank, Yes Bank ஆகிய 4 வங்கிகளுடன் தமிழக அரசு ஆனது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப்பின் இயக்குநர் சிவராஜா ராமநாதன், துறை செயலாளர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு