TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்கான (TNPSC Group 4 2025) தேர்வு தேதியை அறிவித்துள்ளது. தமிழகத்தில் குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் விஏஓ, ஜூனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 காலிப்பணியிடங்கள்: TNPSC Group 4 2025

a group of people sitting at desks

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும்  நபர்களுக்கு TNPSC கூறுகளின்படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான TNPSC வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 24 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். மே 25 ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows