Train Services Extended Till Guduvanchery : கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் ஆனது பயனாளிகளின் தேவையை அறிந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இனி நிம்மதி :
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வரும் பயணிகளும் அல்லது பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் தங்களது சொந்த வாகனங்கள் அல்லது ஆட்டோ, டாக்ஸிகளை நம்பி இருக்கும் சூழல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் இணைப்பு பேருந்து வசதிகள் குறைபாடு குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளுக்காக (Train Services Extended Till Guduvanchery) தற்போது தெற்கு ரயில்வே மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
Train Services Extended Till Guduvanchery - 25/02/2024 முதல் சென்னை மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு :
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செல்லும் பயனாளிகளின் தேவையை அறிந்து வசதியாக, 5 புறநகர் மின்சார ரயில்களின் சேவை வரும் திங்கள் முதல் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த 5 ரயில்கள் ஆனது இனிமேல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே (Train Services Extended Till Guduvanchery) தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆனது மின்சார ரயில்கள் செல்லக்கூடிய வண்டலூர், ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. எனவே இந்த ரயில் சேவை கிளாம்பாக்கம் செல்லும் பேருந்து பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு பெரிய நிம்மதி. சென்னை கடற்கரையில் இருந்து 25/02/2024 முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
மேலும் இந்த ரயில்கள் மறு மார்க்கத்தில் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். இது பயணிகளுக்கு இனி நிம்மதி தரும். மேலும் March மாதத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை (Train Services Extended Till Guduvanchery) இயக்கப்படும். இந்த ரயில்கள் மறு மார்க்கத்தில் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8:55, 9.50, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடையும இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் :
Train Services Extended Till Guduvanchery : தற்போது பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ரயில் நிலையம் அடுத்த ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு இனி பெரிய நிம்மதி.
Latest Slideshows
-
Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
-
VARANASI Official Teaser : ''வாரணாசி'' படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..
-
IPL 2025 Retention List: CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
-
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
-
CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!
-
Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
-
Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..! -
Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
-
TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும் -
PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!