
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Ugadi Festival 2024 : தெலுங்கு வருடப்பிறப்பு வரலாறும், முக்கியத்துவமும்
தெலுங்கு நாட்காட்டியின்படி, புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘யுகாதி’ எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதே நாள் மகாராஷ்டிராவில் ‘குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த பண்டிகை நாள் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஒடிசாவில் இது ‘பான சங்க்ராந்தி’ என்று அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில், ‘பொய்லா பாய்சாக்’ புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹு’ புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன, ஆனால் இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை அப்படியே உள்ளது.
யுகாதி வரலாறும் முக்கியத்துவமும் :
யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது ஆகும். இந்த பண்டிகையானது சந்திர நாள்காட்டின் படி அனுசரிக்கப்படுகிறது. இது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாப்படுகிறது. இந்த நாளில் பிரம்மா பூமியின் பாகங்களை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. மொரீஷியஸில் யுகாதி அன்று விடுமுறை. அங்கு இந்துக்கள் அதிக அளவில் வசிப்பதால், யுகாதி விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில்தான் பிரம்மா உலகைப் படைத்தார் என்று நம்பப்படுகிறது, அன்றிலிருந்து இந்த நாளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. யுகாதி புதிய சகாப்தத்தை நமக்குக் கொண்டு வருகிறது, மேலும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் புதிய ஆண்டின் தொடக்கத்தையும் அன்பானவர்களுடன் கொண்டாடுகிறோம். யுகாதி அன்று வேப்ப இலை, உப்பு, மாங்காய், புளி மற்றும் இனிப்பு கொண்டு உணவு செய்யப்படுகிறது. திருவிழா அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பூஜை செய்வார்கள். வேப்ப இலைகளால் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகு, மற்ற இனிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.
பச்சடி என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு உணவு ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்பட்டு அனைவரும் ருசிக்கிறார்கள். பச்சடி என்பது இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய அனைத்து சுவைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய யுகாதி உணவாகும். புத்தாண்டில் அனைத்து விஷயங்களையும் அனுபவித்து, முழுமையாக அரவணைத்து வாழ, ஒரு சமமான மனநிலையை உருவாக்க மக்களுக்கு நினைவூட்டும் அடையாளமாக இது உள்ளது. புத்தாண்டுக்கு சிலர் தங்கள் வீட்டிற்கு வெள்ளை வண்ணம் பூசுவார்கள். மேலும், வீட்டின் வாயிலில் ரங்கோலி வரையப்படும். வீட்டைச் சுற்றி அலங்கரிக்க மா இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் யுகாதி அன்று தொடங்கப்பட்ட புதிய முயற்சிகள் வெற்றியடையும் என நம்பப்படுகிறது.
Ugadi Festival 2024 :
இந்த ஆண்டு, யுகாதி ஏப்ரல் 9 ஆம் தேதி கொண்டாடப்பட (Ugadi Festival 2024) உள்ளது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, பிரதிபதா திதி ஏப்ரல் 8 ஆம் தேதி பிற்பகல் 23:50 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு 20:30 மணிக்கு முடிவடையும். அனைவருக்கும் யுகாதி தின வாழ்த்துக்கள்.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது