
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
Using AI Mode To Find Missed Child : AI முறையில் காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க முயற்சி
Police Dept Trying To Find The Missing Girl Child In AI Mode :
தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் AI-ஐ (செயற்கை நுண்ணறிவை) பயன்படுத்தி 13 வருடத்திற்கு முன்பாக காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் (Using AI Mode To Find Missed Child) தீவிரமாக இறங்கி உள்ளது. கணேஷ் – வசந்தி என்ற தம்பதியினரின் இரண்டு வயது பெண் குழந்தையான கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க அவரது தந்தை தொடர்ந்து போராடி வருகிறார். இந்த பாசப் போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. காணாமல் போன குழந்தையின் தந்தை வங்கி அதிகாரி கணேசன் (50) சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். இவரது 2 வயது குழந்தை கவிதா கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்தார். இவர்களது வீட்டு மாடியில் உறவினர் குடியிருந்தனர். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீட்டு மாடியில் உறவினர் வீட்டில் இருக்கும் என்று தாய் நினைத்தார்.
சிறிது நேரத்திற்கு பின் குழந்தையை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை மாயமானதைக் கண்டு திடுக்கிட்ட பெற்றோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தையை ‘காணவில்லை’ என்ற பிரிவின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கை அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி துரிதப்படுத்தி தனிப்படைகளை அமைத்து தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு விவகாரம் பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் துப்பு துலக்கியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து போலீசார் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைத்தனர்.
Using AI Mode To Find Missed Child - நவீன AI முறையில் நூதன முயற்சி :
எப்படியும் குழந்தையை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தந்தை கணேசன் காவல் துறையின் கதவுகளை தொடர்ந்து தட்டி வந்தார். இந்நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் குழந்தை மாயமான வழக்கு விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். 13 ஆண்டுகள் கடந்து தற்போதுள்ள AI தொழில்நுட்ப வசதி மூலம் (Using AI Mode To Find Missed Child) 2 வயதில் மாயமான குழந்தை புகைப்படத்தை பயன்படுத்தி தற்போது 14 வயதில் அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்ற தோற்றம் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் குழந்தையின் பழைய புகைப்படம், மற்றும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து போஸ்டராக வெளியிட்டுள்ளனர். மேலும் போலீசார் அந்த போஸ்டரில் மாயமான குழந்தை பற்றி தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்புக் கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மக்கள் அனைவரது கண்களில் இருந்தும் இந்த பாசப்போராட்டம் ஆனது கண்ணீரை வரவழைத்துள்ளது.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller