Uyir Neer Utru Book Review : உயிர் நீர் ஊற்று புத்தக விமர்சனம்
செங்கல்பட்டு அருகே உள்ள பொன் விளைந்த ஊரான களத்தூரில் இருந்து நானும், எனது அம்மாவும் என் மனைவியும் நேற்று பல்லாவரம் வந்துவிட்டோம். எங்கள் உறவினரின் மகனுக்கு திருமணம் நடக்கவிருந்த (Uyir Neer Utru Book Review) மணமகளின் வீடு இங்குதான் இருந்தது. காலை ஏழரை ஒன்பது முகூர்த்த நேரம். கல்யாணமும், சிற்றுண்டியும் முடித்து ஒரு முக்கியமான இடத்திற்கு கிளம்பினோம். ஒரு ஆட்டோவை அமர்த்தி அந்த இடத்திற்குச் சென்றோம்.
அது ஒரு பொதுக் கிணறு. ஆனால் தண்ணீர் இறைக்க யாரும் வரவில்லை. நான் சிறுவயதில் இருக்கும் போது பல்லாவரத்தில் எல்லோரும் நல்ல தண்ணீருக்காக இந்தக் கிணற்றில்தான் தண்ணீர் எடுப்பார்கள். என் அம்மாவும் இங்கிருந்துதான் தண்ணீர் எடுப்பாள். அவள் தினமும் சராசரியாக நூறு (Uyir Neer Utru Book Review) குடமாவது எடுப்பார். அதை அனைத்தையும் பல வீடுகளுக்கு விநியோகிப்பார். அந்தத் தொகையை வைத்து தான் எங்கள் வாழ்க்கை ஓடியது. எனது தந்தை தோல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவரால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. தாம்பரம் டிபி சானடோரியத்தில்தான் இருப்பார். பிறகு என்ன தான் சம்பளமாக கிடைக்கும். என் அம்மாவின் தண்ணீர் வியாபாரத்தில் தான் குடும்ப வண்டி ஓடியது.
உயிர் நீர் ஊற்று (Uyir Neer Utru Book Review)

வீட்டில் உள்ள பெரிய பேரல்களில் அம்மா தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவார். நான் அவளுடன் கிணற்றுக்கு ஓடுவேன், பின்னர் அவளுடன் வீட்டிற்கு ஓடுவேன். அதற்கு அம்மா ‘உனக்கு ஏன்டா இது தலவிதியா’ என்று கேட்டார். உனக்கு என்ன (Uyir Neer Utru Book Review) விதியோ எனக்கும் அது தான் என்று கேட்க தெரியாத வயதென்பதால் நான் கேட்டதில்லை. கிணற்றுக்குள் கூர்ந்து பார்த்தால் வாளி எங்கே என்று தெரியாது அந்த அளவிற்கு மிகவும் ஆழமானது. இந்த கிணறு எங்களை போன்ற பலருக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டு இருந்தது. குடிப்பழக்கமும், உடல்நிலை சரியில்லாத குடும்பத் தலைவிகளை கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிடுவது என்றால் இதில் ஊறிய உயிர் நீரில் தான். தாம்பரம் சானடோரியத்துக்குப் போய் வந்து கொண்டிருந்த என் அப்பா ஒரு நாள் இறந்து போனார். அதன் பிறகுதான் என் தாத்தா பாட்டி எங்களை களத்தூர் அழைத்து வந்துவிட்டார்கள். என் அம்மா விவசாய வேலை செய்து என்னை வளர்த்தார்.
நான் நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து அம்மாவை கஷ்டப்படுத்தாமல் வைத்திருக்கிறேன். கிணற்றை அடைந்ததும் இருவராலும் பேச முடியவில்லை. ஆனால் என் அம்மா வேறுவிதமாக உணர்ந்தார். ஆம், அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. கூர்ந்து பார்த்தால் கிணறு பயன்பாடின்றி கிடக்கிறது. அதிலிருந்து இப்போது யாரும் தண்ணீர் எடுப்பதில்லை . இது பல்லாவரத்தின் நினைவுச் சின்னமாக (Uyir Neer Utru Book Review) காட்சியளிக்கிறது. இதுதான் கப்பலோட்டிய தமிழன் சிறைச்சாலையில் இழுத்த செக்கு. இந்த வரிசையில் தான், இது என் அம்மா தண்ணீர் எடுத்த கிணறு என்று என் மனைவியிடம் காட்டினேன். அவளும் புராதனச் சின்னத்தை பார்ப்பது போல் பார்த்தாள். அந்தக் கிணற்றில் இருந்து பொங்கி வழியும் உயிர்நீர் ஊற்று வற்றிவிட்டதால் இன்று வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.
Latest Slideshows
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Vivo V50 Smartphone Launch On February 17 : விவோ நிறுவனம் விவோ வி50 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 17-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
Vidaamuyarchi Movie Review : விடாமுயற்சி திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
World Cancer Day : உலக புற்றுநோய் தினமும் அதன் முக்கியத்துவமும்
-
Vidaamuyarchi Ticket Booking : ப்ரீ புக்கிங்கில் கெத்து காட்டும் விடாமுயற்சி
-
2025-26 Budget Presented In Parliament : 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது