Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா

Vijay Tv KPY Bala : விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, ‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் :

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘மிக்ஜாம்’ புயலாக மாறியது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் பலத்த காற்று வீசியது மட்டுமின்றி, இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால், ஏரி குளங்கள் நிரம்பி, சென்னையில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பலர் வேலைக்குச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்க, எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக மாறி உள்ளது. அதேபோல் பெரும்பாலான கடைகள், மருந்தகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், குழந்தைகளுக்கு பால், முதியோர்களுக்கு மருந்து வாங்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அதே சமயம், வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு என இருக்கும் மக்கள் கையில் பணமின்றி தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு படகு மூலம் சென்று உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தாலும், அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியவில்லை. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு அருகில் உள்ள இடங்களில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளித்திரை பிரபலங்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சில பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதி உதவி செய்து வருகின்றனர். அதேபோல் விஜய் டிவியின் பிரபல அறந்தாங்கி நிஷா ஆயிரம் பேருக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்த வரிசையில் விஜய் டி.வி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா (Vijay Tv KPY Bala) நிதியுதவி வழங்கியுள்ளார்.

Vijay Tv KPY Bala உதவி :

இவர்களுடன் பல இளைஞர்களும் கைகோர்த்து உதவுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 200 குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாயை வழங்கி உதவியுள்ளார் குக் வித் கோமாளி பாலா (Vijay Tv KPY Bala). பாலா ஏற்கனவே மலை கிராம மக்களுக்காக 4 ஆம்புலன்ஸ்கள் மற்றும் முதியோர் இல்லம் வாங்கி பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார். அவ்வப்போது தன்னிடம் உதவி கேட்கும் பலருக்கு தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து உதவுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ மீண்டும் களத்தில் இறங்கி உதவி வருகிறார். இதையடுத்து பாலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply