Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தி 2024 வரலாறும் கொண்டாட்டமும்
விநாயகர் உருவான வரலாறு :
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் குழந்தையாகக் கருதப்படும் யானைத் தலைக் கடவுளான விநாயகப் பெருமானின் பிறப்பை விநாயகர் சதுர்த்தியாக (Vinayagar Chaturthi 2024) கொண்டாடப்படுகிறது. இந்து புராணங்களின்படி பார்வதி தேவி தனது சொந்த உடலைப் பயன்படுத்தி விநாயகரை வடிவமைத்த பிறகு சிவபெருமான் விநாயகருக்கு உயிர் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. “விக்னஹர்தா” அல்லது “தடைகளை நீக்குபவர்” என அழைக்கப்படும் விநாயகர் அறிவு, ஞானம், மற்றும் கற்றலின் கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயக பக்தர்கள் தங்கள் முயற்சிகள், கல்வி மற்றும் புதிய தொடக்கங்களில் வெற்றி பெற அவரது ஆசீர்வாதத்தை நாடுகின்றனர்.
17 ஆம் நூற்றாண்டில் தோற்றம் :
- விநாயக சதுர்த்தி 17 ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசில் மகாராஜா சத்ரபதி சிவாஜி (1627-1680) அவர்களால் தனது குடிமக்களிடையே தேசியவாதம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக முதன்முதலாக புனேவில் கொண்டாடப்பட்டது.
- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் சுதந்திரத்திற்காக போராட மக்களை ஒன்றிணைத்து அவர்களை ஊக்குவிக்கும் ஒரு ஊடகமாக இதைப் பயன்படுத்தியபோது விநாயகர் சதுர்த்தி திருவிழா ஒட்டுமொத்த பிரபலத்தைப் பெற்றது.
விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் :
- விநாயக சதுர்த்தி என்பது சமூகங்களை ஒன்றிணைப்பதற்காக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் இந்தியா முழுவதும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.
- ஆழமான சாதி, மதத்திற்கு அப்பால் கணேஷ் சதுர்த்தி மகத்தான சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து திருவிழா நடைபெறுகிறது.
Vinayagar Chaturthi 2024 எப்போது :
கணேஷ் உத்சவ் என அழைக்கப்படும் விநாயக சதுர்த்தியானது 10 நாள் கொண்டாட்டமாக உலகெங்கிலும் உள்ள இந்துக்களாலும் குறிப்பாக இந்தியாவில் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. தூம்ரகேது, வக்ரதுண்டா, சித்தி விநாயகா என பல பெயர்களில் அழைக்கப்படும் விநாயகப் பெருமான் ஞானம், அறிவு, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கடவுளாகப் வணங்கப்படுகிறார். 10 நாள் திருவிழாவில் 4-வது நாளில் விநாயகர் சதுர்த்தி தொடங்குகிறது. மேடைகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட களிமண் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பல்வேறு சடங்குகள் மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியானது (Vinayagar Chaturthi 2024) வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 03:01 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் மாநிலங்கள் :
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் கோவா மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்