World Cup 2023 England vs Newzeland: காலியாக இருக்கும் மைதானம்.. இங்கிலாந்து ரசிகர்கள் கூட வரவில்லை..

World Cup 2023 England vs Newzeland: ஐ.சி.சி உலகக் கோப்பையில் முதல் லீக் போட்டிக்கு பார்வையாளர்கள் இல்லாதது பிசிசிஐ-யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

World Cup 2023 England vs Newzeland

World Cup 2023 England vs Newzeland: போட்டி தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் கூட இல்லை. பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன.

சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீத இருக்கைகள் கூட நிரம்பவில்லை. இதற்கு பி.சி.சி.ஐயின் மெத்தனப் போக்கே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பொதுவாக பார்மி ஆர்மி என்ற பெயரில் உலகின் எந்த மூலையிலும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க இங்கிலாந்து ரசிகர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை பார்மி ஆர்மியில் இருந்து ரசிகர்கள் யாரும் இந்தியாவுக்கு வரவில்லை. ஏனென்றால், உலகக் கோப்பை தொடருக்கு 10 மாதங்களுக்கு முன்பே அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் பி.சி.சி.ஐ ஒரு மாதத்திற்கு முன்பே அட்டவணையை தயாரித்தது. மேலும், போட்டி அடிக்கடி மாற்றப்பட்டு ரசிகர்களை குழப்பியது.

மேலும் போதிய விமான போக்குவரத்து வசதி மற்றும் உணவக விடுதி வசதியும் இல்லை. இதனால் இந்த போட்டியை காண எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் வரவில்லை. சரி, இந்தப் போட்டியை உள்ளூர் மக்கள் வந்து பார்ப்பார்கள் என்றால், மக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

டிக்கெட் பெறும் நடைமுறை எளிதாக இல்லாததால், சாதாரண மக்கள் மைதானத்திற்கு வர முடியவில்லை. மேலும் இந்தியா முதல் போட்டியில் விளையாடாததே இதற்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் அதுவும் தவறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் 1996 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அகமதாபாத்தில் இதே மைதானத்தில் விளையாடின.

ஆனால் அந்த போட்டிக்கு மைதானம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. ஆனால் இன்று அப்படியொரு நிலை இல்லை. மேலும் உலக கோப்பை குறித்து ரசிகர்களுக்கு போதிய விளம்பரம் செய்ய பிசிசிஐ தவறியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply