சென்னையில் 07/01/2024 அன்று World Investor Conference 2024 தொடங்குகிறது

தொழில்துறை அதிசயத்தைக் காண உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ல் கலந்து கொள்ளுங்கள் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு :

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (World Investor Conference 2024) தொடங்குகிறது. முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும் மற்றும் நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார். 

சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ (World Investor Conference 2024) நாளை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளார்கள். இந்த மாநாட்டில் 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். 50க்கும் மேற்பட்ட  நாடுகளைச் சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

World Investor Conference 2024 சிறப்புகள் :

இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதார நாடுகளாக ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் பிரான்ஸ் ஆகிய 9 நாடுகள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் 26 அமர்வுகளில் பங்கேற்கிறார்கள். உலகளாவிய பொருளாதார ஆலோசகர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவார்கள். மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உட்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள். இந்த மாநாட்டில் டான்ஃபண்ட் (TANFUND) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024, (Semiconductor And Advanced Manufacturing Policy, 2024) ஆனது வெளியிடப்படும். மேலும், “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஒரு ஆய்வறிக்கை ஆனது வெளியிடப்படும்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) வலைத்தள பக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் :

முதல்வர் ஸ்டாலின் உலக முதலீட்டாளர் மாநாடு (World Investor Conference 2024) நாளை தொடங்க உள்ள நிலையில் தனது எக்ஸ் (X) வலைத்தள பக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024  தமிழ்நாட்டில் நெருங்கி வருவதால், எதிர்பார்ப்பு ஆனது அதிகமாகியுள்ளது. 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தமிழக அரசின்  பிரச்சாரங்கள், #TitansofTamilNadu மற்றும் #OneTrillionDreams ஆகியவை மக்களுக்கு உற்சாகத்தைத் தூண்டியுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 450+ சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக அமையவுள்ளது. இந்த மாநாட்டின் அமர்வுகளை 26 தலைமையாளர்களை கொண்டு இந்த தமிழக அரசு வரிசைப்படுத்தியுள்ளது.

ஒரு MSME பெவிலியன், Startup TN பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன் மற்றும் பல நாட்டு அரங்குகள் ஆகியவை தொழில்துறை அதிசயமாக இந்த மாநாட்டில் அமையவுள்ளன. பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும், வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை இந்த மாநாடு ஆனது வழங்கும். நமது தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும் மற்றும் நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள். 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வரும் பல நாட்டு முதலீட்டாளர்களையும்  மகிழ்ச்சியுடன் வரவேற்க சென்னை பெரு நகரம் ஆனது தயாராகி வருகிறது என அனைவருக்கும் அழைப்பு விடுத்து பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply